மணப்பந்தலில் பொழிந்த பூக்கள்.. வாழ்த்திச் சென்ற மழைத்துளி.. வாசகரின் நெகிழ்ச்சி அனுபவம்!
சென்னை: நமது அன்பு வாசகர் கார்த்திக் ரகுராம். கோபிச்செட்டிப்பாளையம் அருகே கலிங்கியம் பகுதியிலிருந்து எழுதியுள்ள ஒரு மடல்...
இந்த நிகழ்வு நடந்து மூன்று ஆண்டுகள் கடந்து இருக்கும். என் காதலியிடம் அலைபேசியில் காதலை கூறி ஒரு வாரம் கடந்து நடந்த நிகழ்வு. அதுவரை கண் பார்த்து பேசியதில்லை, குறுஞ்செய்திகளே எங்களுக்குள் தூது சென்றது. அன்று ஊரை விட்டு இருபது கிலோமீட்டர் கடந்து இருக்கும் ஒரு கோவிலுக்கு செல்வது என முடிவு செய்யப்பட்டது.

அவளை ஒரு பேருந்து நிறுத்தத்தில் என் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டேன். ஆனாலும் பத்து கிலோமீட்டர் கடந்தும் எங்கள் உதடுகள் வார்த்தைகளை பரிமாறிக் கொள்ளவில்லை. ஒருவித பதற்றம் தொற்றிக்கொண்டது. யாரும் அதிகம் பயணிக்காத மதிய வேளையில் பவானி சாலையில் பயணிக்கும்போது மழை வந்தே விட்டது.
எங்களுக்காகவே திறக்கப்பட்டது போல, ஒரு தேநீர் கடை இருந்தது. அகற்றப்படாமல் இருந்த பூமாலையும், சரியாக அழியாத திருநீறும் அந்த கடை திறந்து சில நாட்களே ஆனதை எடுத்துக் கூறியது. அங்கு தேநீர் கடை அக்காவை தவிர யாரும் இல்லை. மழைச்சாரல் மேனியை உரசும் அளவிற்கு ஒரு இடம் பிடித்து அமர்ந்தோம். தேநீரும் வந்தது, ஆனால் எங்கள் உதடுகளில் வார்த்தைகள் வரவில்லை. கண்கள் மட்டும் மௌன மொழி வாசிக்க, நான் பேச நினைத்த வார்த்தைகளை மழை இசைத்து கொண்டிருந்தது. தேநீரின் சூட்டை மழைக்காற்று வேகமாய் தனித்து கொண்டிருந்தது. மௌன மொழியுடன் தேநீர் கோப்பை காலியாவதற்கும், மழை விடுவதற்கும் சரியாக இருந்தது அந்த ஒரு மணி நேரம்...!
ஒரு வழியாக மௌனம் கலைத்து "அதிக மழை போல குளிர்தா..." இதுவே என்னவளிடம் நான் பேசிய முதல் கவிதை. அதற்கும் அவளின் கண்களே பதில் கொடுத்தது. தேநீருக்கும் பணம் செலுத்திவிட்டு சிறிது தூரம் பயணிக்கையில், லேசான தூரல் மழை மணப்பந்தலில் பொழியும் பூக்களை போல தூவி எங்களை வாழ்த்திவிட்டு சென்றது...
இன்று திருமனம் முடிந்து இரண்டு வருடங்களை நோக்கி பயணிக்கும் எங்கள் வாழ்க்கை, மணப்பந்தலில் சொந்தங்கள் கூடி வாழ்த்தி இருந்தாலும், எங்கள் காதலை முதலில் வாழ்த்தியது மழைதான்...!
மழை என்றுமே வாழ்க்கையின் தருணங்களில் நினைவுகளை சுமந்தே எங்களுடன் பயணிக்கிறது.
கார்த்திக் ரகுராம்
கலிங்கியம்
கோபிச்செட்டிபாளையம்.
-
காந்திபுரம் பேருந்து நிலையத்தில் குத்தாட்டம்.. கேரளா யூடியூபரை டரியலாக்கிய கோவை போலீஸ் -
சாம்பாரில் பல்லி.. கோவை பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 44 மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி -
கேஸ் தட்டுப்பாடு! கோவையில் அடுப்பே இல்லாமல் 2000 டிஷ்! தேங்காயில் தயிர்! படையல் சிவா அசத்தல் -
கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை வீடாக மாற்றிக்கொண்ட திமுக பிரமுகர்.. அண்ணாமலை வீடியோ -
வெள்ளியங்கிரி மலையில் மீண்டும் சோகம்.. முதல் மலையிலேயே மூச்சுத்திணறி பக்தர் உயிரிழப்பு! -
காதுக்கு வந்த தகவல்.. என்ன நடந்தாலும் விடக்கூடாது.. செந்தில் பாலாஜி போட்ட சபதம்.. என்னாச்சு? -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய்












Click it and Unblock the Notifications