மணப்பந்தலில் பொழிந்த பூக்கள்.. வாழ்த்திச் சென்ற மழைத்துளி.. வாசகரின் நெகிழ்ச்சி அனுபவம்!
சென்னை: நமது அன்பு வாசகர் கார்த்திக் ரகுராம். கோபிச்செட்டிப்பாளையம் அருகே கலிங்கியம் பகுதியிலிருந்து எழுதியுள்ள ஒரு மடல்...
இந்த நிகழ்வு நடந்து மூன்று ஆண்டுகள் கடந்து இருக்கும். என் காதலியிடம் அலைபேசியில் காதலை கூறி ஒரு வாரம் கடந்து நடந்த நிகழ்வு. அதுவரை கண் பார்த்து பேசியதில்லை, குறுஞ்செய்திகளே எங்களுக்குள் தூது சென்றது. அன்று ஊரை விட்டு இருபது கிலோமீட்டர் கடந்து இருக்கும் ஒரு கோவிலுக்கு செல்வது என முடிவு செய்யப்பட்டது.

அவளை ஒரு பேருந்து நிறுத்தத்தில் என் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டேன். ஆனாலும் பத்து கிலோமீட்டர் கடந்தும் எங்கள் உதடுகள் வார்த்தைகளை பரிமாறிக் கொள்ளவில்லை. ஒருவித பதற்றம் தொற்றிக்கொண்டது. யாரும் அதிகம் பயணிக்காத மதிய வேளையில் பவானி சாலையில் பயணிக்கும்போது மழை வந்தே விட்டது.
எங்களுக்காகவே திறக்கப்பட்டது போல, ஒரு தேநீர் கடை இருந்தது. அகற்றப்படாமல் இருந்த பூமாலையும், சரியாக அழியாத திருநீறும் அந்த கடை திறந்து சில நாட்களே ஆனதை எடுத்துக் கூறியது. அங்கு தேநீர் கடை அக்காவை தவிர யாரும் இல்லை. மழைச்சாரல் மேனியை உரசும் அளவிற்கு ஒரு இடம் பிடித்து அமர்ந்தோம். தேநீரும் வந்தது, ஆனால் எங்கள் உதடுகளில் வார்த்தைகள் வரவில்லை. கண்கள் மட்டும் மௌன மொழி வாசிக்க, நான் பேச நினைத்த வார்த்தைகளை மழை இசைத்து கொண்டிருந்தது. தேநீரின் சூட்டை மழைக்காற்று வேகமாய் தனித்து கொண்டிருந்தது. மௌன மொழியுடன் தேநீர் கோப்பை காலியாவதற்கும், மழை விடுவதற்கும் சரியாக இருந்தது அந்த ஒரு மணி நேரம்...!
ஒரு வழியாக மௌனம் கலைத்து "அதிக மழை போல குளிர்தா..." இதுவே என்னவளிடம் நான் பேசிய முதல் கவிதை. அதற்கும் அவளின் கண்களே பதில் கொடுத்தது. தேநீருக்கும் பணம் செலுத்திவிட்டு சிறிது தூரம் பயணிக்கையில், லேசான தூரல் மழை மணப்பந்தலில் பொழியும் பூக்களை போல தூவி எங்களை வாழ்த்திவிட்டு சென்றது...
இன்று திருமனம் முடிந்து இரண்டு வருடங்களை நோக்கி பயணிக்கும் எங்கள் வாழ்க்கை, மணப்பந்தலில் சொந்தங்கள் கூடி வாழ்த்தி இருந்தாலும், எங்கள் காதலை முதலில் வாழ்த்தியது மழைதான்...!
மழை என்றுமே வாழ்க்கையின் தருணங்களில் நினைவுகளை சுமந்தே எங்களுடன் பயணிக்கிறது.
கார்த்திக் ரகுராம்
கலிங்கியம்
கோபிச்செட்டிபாளையம்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications