For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை விமான நிலையத்தில் “மர்மப்பை”, வெடித்த கார் டயர் – போலீஸ் விசாரணை

Google Oneindia Tamil News

சென்னை: இன்று காலை சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் 3 ஆவது வாயிலில் "மர்ம பை" ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அங்கு சென்று பையை கைப்பற்றினார்கள். வெடி குண்டு நிபுணர்களும் வர வழைக்கப்பட்டனர்.

அதை பரிசோதனை செய்த போது பையின் உள்ளே ரிமோட் பொம்மை கார் இருப்பது தெரிய வந்தது. விமானத்தில் வந்த பயணிகளில் யாரோ ஒருவர் அதை தவறுதலாக விட்டுச் சென்றிருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும், இன்று காலை 10.15 மணிக்கு உள்நாட்டு விமான நிலையத்தின் வருகை பகுதிக்கு வாடகை கார் ஒன்று வந்தது. அப்போது எதிர்பாராத வகையில் அதன் முன் சக்கரங்களில் ஒன்று பலத்த ஓசையுடன் வெடித்தது.

இதனால் தாறுமாறாக ஓடிய அந்த கார் பிளாட் பாரத்தில் ஏறியது. உடனே அந்த வழியாக சென்றவர்கள் அலறியடித்து ஓடினார்கள். இதனால் விமானநிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டிரைவர் காரை அதே இடத்தில் நிறுத்தி விட்டு ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

English summary
A unknown bag finds out in Chennai airport. And a car’s weal blast in same airport today morning.police investigate about this incidents.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X