”பச்சைப் பரிவட்டம்...விபூதி அபிஷேகம்...சித்தர்கள் பூஜை” - தென்காசி கோவிலில் பரபரப்பு
தென்காசி: குற்றாலத்தில் பூட்டப்பட்டிருந்த முருகன் கோவில் ஒன்றில் அர்ச்சனை நடைபெற்றிருந்ததால் மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
குற்றாலம் அருகே உள்ள குடியிருப்பில் கூத்தரபிரான் கோவில் உள்ளது. இங்கு சிவன், அம்மன் பீடங்கள் மற்றும் விநாயகர், முருகன் சுவாமி சிலைகள் உள்ளன. இந்த கோவில் நிர்வாகியாகவும், பூசாரியாகவும் செண்பகமீனா என்பவர் உள்ளார்.

நேற்று இரவு பூஜைகளை முடித்து 8 மணிக்கு செண்பகமீனா கோவிலை பூட்டி விட்டு சென்றார். இன்று தைப்பூச திருவிழா என்பதால் முருகனுக்கு பூஜை செய்வதற்காக அதிகாலை 4 மணிக்கு அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார்.
சுவாமிக்கு விபூதி அபிஷேகம்:
கோவில் நடையை திறந்து பார்த்தபோது உள்ளே இருந்த முருகன் சிலை விபூதி அபிஷேகம் செய்யப்பட்டு, பரிவட்டம் கட்டி அலங்காரத்துடன் இருந்தது. இதை கண்ட செண்பகமீனா ஆச்சரியம் அடைந்தார்.
சித்தர்கள் ராஜ்ஜியம்:
இது குறித்து கோவில் பூசாரி செண்பகமீனா கூறும் போது, "குற்றாலம் மலைப்பகுதியில் ஏராளமான சித்தர்கள் இன்றும் உள்ளனர். அவர்கள் இந்த பகுதியில் உள்ள கோவில்களுக்கு வந்து செல்வது உண்டு.
பச்சை பரிவட்ட ஆராதனை:
இந்த கோவிலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இன்று நடந்தது போல் பூட்டிய கோவிலுக்குள் இருந்த முருகன் சிலைக்கு சந்தன அபிஷேகம் செய்யப்பட்டிருந்தது. இன்றும் அதுபோல் விபூதி அபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. முருகனுக்கு கட்டப்பட்டுள்ள பச்சை பரிவட்டம் இந்த கோவிலில் இதுவரை இருந்தது இல்லை. இதை சித்தர்கள்தான் செய்துள்ளனர்" என்றார்.
பக்தர்கள் பரவசம்:
கோவில் அருகே உள்ள பொது மக்களும் அதிகாலை நேரத்தில் கோவிலில் இருந்து மணி சத்தம் கேட்டதாக கூறுகின்றனர். இது குறித்து
தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கூத்தபிரான் கோவிலுக்கு திரண்டு வந்தனர்.
தென்காசியில் பரபரப்பு:
அலங்காரத்துடன் காட்சி அளித்த முருகன் சிலையை அவர்கள் பக்தி பரவசத்துடன் வணங்கினர். பூட்டிய கோவிலுக்குள் சித்தர்கள் வந்து முருகன் சிலைக்கு அபிஷேகம், அலங்காரம் செய்ததாக கூறப்படும் சம்பவம் குற்றாலம் மற்றும் தென்காசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications