சென்னை: மகன்களைக் காப்பாற்ற முயன்ற பெண்ணை தீ வைத்துக் கொன்ற வாலிபர் கைது
சென்னை: தெருச் சண்டையில் மகன்களை காப்பாற்ற தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டிய பெண்ணை எரித்துக் கொன்ற வாலிபர் கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.
சென்னை, ஓட்டேரி, சாமிதாஸ் புரத்தை சேர்ந்த ஸ்டாலின் என்பவரது மனைவி மோட்சா என்ற மேரி (56). இவரது மகன்கள் சார்லஸ், விவேக். மோட்சாவின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் பெயிண்டர் தண்டபாணி.
கடந்த மாதம் 28-ந்தேதி குடிபோதையில் வந்த தண்டபாணி அப்பகுதியில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனை சார்லசும், விவேக்கும் தட்டிக் கேட்டுள்ளனர். வாக்குவாதம் கைகலப்பாக மாறவே, சார்லஸ், விவேக் இருவரும் சேர்ந்து தண்டபாணியைச் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
தண்டபாணி தாக்கப்பட்ட தகவலறிந்த அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். திரண்டிருந்த கூட்டத்தைப் பார்த்துப் பயந்து போன மோட்சா, கூட்டத்தினர் தனது மகன்களை ஏதேனும் செய்து விடுவார்களோ என அஞ்சி, தன் மகன்களைத் தாக்க முற்பட்டால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியுள்ளார்.
இதற்காக உடல் முழுவதையும் மண்ணெண்ணெய் ஊற்றி நனைத்த மோட்சா கையில் தீப்பெட்டியுடன் சாலையின் நடுவே நின்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மோட்சா கையில் இருந்த தீப்பெட்டியை பறித்துள்ளனர்.
ஆனால், அப்போது குடிபோதையோடு அடி வாங்கிய ஆத்திரத்தில் இருந்த தண்டபாணி தன்னிடம் இருந்த தீப்பெட்டி மூலம் மோட்சாவைக் கொளுத்தியுள்ளார். இதனால் உடல் கருகிய மோட்சா உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சைப் பலனின்றி நேற்று இரவு மோட்சா பரிதாபமாக உயிரிழந்தார்.
மோட்சா உயிரிழந்ததைத் தொடர்ந்து தண்டபாணி மீது பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றப் பட்டது. தற்போது தண்டபாணி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications