முந்திரிகாட்டில் கொல்லப்பட்ட இளம்பெண்... கள்ளக்காதலன் வாக்குமூலம்!
அரியலூர் அருகே அண்மையில் இளம் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுதொடர்பாக அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
அரியலூர்: அரியலுர் அருகே அண்மையில் இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் அவரது கள்ளக்காதலனை கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை அடுத்த கொளப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார்.

ஜெயலட்சுமிக்கும் அதேபகுதியைச் சேர்ந்த அன்பரசன் என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற ஜெயலட்சுமி 3 நாட்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயலட்சுமியின் கணவன் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்குள்ள முந்திரிக் காட்டில் கிடந்த இளம்பெண் ஒருவரின் சடலத்தை மீட்டு விசாரித்தனர்.
அதில் அந்த சடலம் மாயமான ஜெயலட்சுமிதான் என தெரியவந்தது. இதையடுத்து அவர் கடைக்கு சென்றபோது யாராவது பார்த்தார்களா என போலீசார் விசாரித்தனர்.
அப்போது அவர் அன்பரசனுடன் பைக்கில் சென்றதாக சிலர் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அன்பரசனை பிடித்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
ஜெயலட்சுமிக்கும் அவருக்கும் கள்ளக்காதல் இருந்ததை ஒப்புக்கொண்டார். இருவரும் அடிக்கடி வெளியூர்களில் தனிமையில் சந்தித்து வந்தாதகவும் அவர் கூறினார்.
சம்பவத்தன்று இருவரும் அங்குள்ள முந்திரிக்காட்டுக்கு உல்லாசமாக இருக்க சென்றுள்ளனர். அப்போது 2 பேருக்கும இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அன்பரசன், ஜெயலட்சுமியை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications