ஆதார் அட்டை இல்லாதோருக்கு கேஸ் மானியம் நிறுத்திவைப்பு: பொதுமக்கள் அதிர்ச்சி
சென்னை: ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு சமையல் எரிவாயு மானியம் வழங்குவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாகவே ஆதார் அட்டை இல்லாத வாடிக்கையாளர்களுக்கு சமையல் கேஸ் மானியம் வழங்கப்படவில்லை. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் வங்கி மற்றும் கேஸ் ஏஜென்சிகளில் வருகின்ற செப்டம்பர் மாதம் மாதம், 30 தேதிக்குள் ஆதார் அட்டை விவரத்தை வழங்கவிட்டால் கேஸ் மானியத்தை நிறுத்த எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.

தமிழகத்தில், 1.62 கோடி வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். மத்திய அரசு, 2015 ஜனவரி மாதம், சமையல் காஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டத்தை துவக்கியது. இந்த திட்டத்தில், வாடிக்கையாளர், சந்தை விலையில், காஸ் சிலிண்டர் வாங்க வேண்டும். பின், அதற்கான மானிய தொகை, அவரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
நேரடி மானிய திட்டத்தில் இணைவதற்கு, காஸ் ஏஜன்சிகளில், விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. அந்த விண்ணப்பத்துடன், வாடிக்கையாளரிடம் இருந்து, ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகலை, எண்ணெய் நிறுவனங்கள் கேட்டன; ஆனால், பலரிடம், ஆதார் அட்டை இல்லை.
இதனால், மக்களிடம், நேரடி மானிய திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பின், வாடிக்கையாளரிடம் இருந்து, வங்கி கணக்கு புத்தக நகலை மட்டும் பெற்று, மானிய திட்டத்தில் சேர்த்தன. சிலிண்டர் வாங்கிய பின், மானிய தொகை, வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்த நிலையில், செப்டம்பர் மாதத்திற்குள், ஆதார் அட்டை நகலை தராதவர்களுக்கு, மானியத்தை நிறுத்த, எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்து உள்ளன.
இது தொடர்பாக சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகஸ்தர்கள் தரப்பில் எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்படுகிறது. வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் வங்கி மற்றும் கேஸ் ஏஜென்சிகளில் வருகின்ற செப்டம்பர் மாதம் மாதம், 30 தேதிக்குள் ஆதார் அட்டை விவரத்தை வழங்கவிட்டால் கேஸ் மானியத்தை நிறுத்த எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.
எனவே, வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆதார் அட்டையை பெறுவதை வலியுறுத்தும் வகையில் எண்ணெய் நிறுவனங்கள் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மட்டும் 7.1 கோடி மக்களில் 6.30 கோடி மக்கள் ஆதார் அடையாள அட்டை பெற்றுள்ளனர். சென்னையை பொருத்தவரை 70% மக்கள் ஆதார் அடையாள பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கிராமங்களில் சிலிண்டர் புக்கிங் புதிய ரூல்ஸ்.. 3 நாளில் சிலிண்டர் வரும்.. அறிய வேண்டிய பெரிய மாற்றம் -
இந்தியாவிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு கேஸ் சிலிண்டர் இருப்பு உள்ளது? எப்படி சமாளிக்கலாம்? -
வழக்கத்தை விட 30% கூடுதலாக எல்பிஜி உற்பத்தி.. சிலிண்டர் தட்டுப்பாடு வராது! மத்திய அரசு விளக்கம்! -
சென்னையில் சிலிண்டர் புக்கிங் தோல்வி.. காஸ் ஏஜென்சிகளை முற்றுகையிடும் மக்கள்.. என்ன நடக்கிறது? -
LPG சிலிண்டரில் CNG கேஸை நிரப்பும் மக்கள்! ஆபத்து! சிலிண்டர் வெடிக்கும் அபாயம்! வார்னிங்! -
தமிழகத்தில் முதல்முறை! கேஸ் சிலிண்டர் பதுக்கிய 2 பேர்.. குண்டர் பாய்ந்தது! அதிரடி கைது! -
பெட்ரோல், டீசல், LPG தட்டுப்பாடு இல்லை.. நாடாளுமன்றத்தில் அடித்து சொன்ன மத்திய அமைச்சர்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்!












Click it and Unblock the Notifications