வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் அவசியம் – நோட்டீஸ் ஒட்டி எச்சரிக்கும் தேர்தல் ஆணையம்
சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் இல்லம் முன்பு தேர்தல் அதிகாரிகள் நோட்டீஸ் ஓட்டி வருகின்றனர்.
அந்த நோட்டீசில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,"வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்கள் வீட்டில் விபரம் சேகரிக்க வந்தபோது தங்களுடைய வீடு பூட்டப்பட்டு இருந்தது. ஆதார் எண்ணின் விவரங்களும் சேர்க்கப் படவில்லை.
விசாரணையில் குடியிருக்கவில்லை என்று தகவல் தரவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே, இந்த அறிவிப்பை கண்டவுடன் தாங்களாகவே வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அல்லது மாநகராட்சி பகுதி அலுவலகம், மண்டல அலுவலகத்தில் தங்களது ஆதார் எண், மற்றும் அதிலுள்ள முகவரியை எழுத்துபூர்வமாக தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தவறும்பட்சத்தில் தாங்கள் குடியிருக்கவில்லை என கருதி தங்களுடைய வாக்காளர் பதிவினை நீக்கம் செய்ய மேல் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.