கோவா மக்கள் முட்டாள்கள் இல்லை.. முதல்வர் லட்சுமிகாந்த் பர்சேகர்
பனாஜி: கோவா மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை, டெல்லி போன்று இங்கு ஆம் ஆத்மி கட்சியால் வெற்றிப் பெற முடியாது என்று அம்மாநில முதல்வர் லட்சுமிகாந்த் பர்சேகர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யூனியன் பிரதேசமான கோவாவிற்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. 70 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்டுள்ள கோவாவை ஆம் ஆத்மி குறிவைத்து களமிறங்கவுள்ளது.

இதன் முதல்கட்ட முன்னோட்டமாக நேற்று கோவா தலைநகர் பனாஜியில் ஆம் ஆத்மி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவரும், டெல்லியின் முதல்வருமான அரவிந்த் கெஜிரிவால் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜிரிவாலை வரவேற்றுள்ள கோவா முதல்வர் லட்சுமிகாந்த் பர்சேகர், கோவா மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்றும் டெல்லி போன்று இங்கு ஆம் ஆத்மி கட்சியால் வெற்றிப் பெற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், "ஆம் ஆத்மி கோவாவில் போட்டியிடுவதை வரவேற்கிறேன். ஆனால் அவர்களால் வெற்றிப் பெற முடியாது. கோவா மக்கள் உணர்ச்சிகரமானவர்கள் கிடையாது. ஆம் ஆத்மி கங்கிரஸ் வாக்குகளை பிரிக்கும். ஆனால் ஜெயிக்காது." என்று தெரிவித்தார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வரலாறு காணாத வகையில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளில் வென்று ஆட்சியை கைப்பற்றியது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications