நெல்வயலில் டிராக்டர் உழுத சர்ச்சை... ஆரணி டிஸ்பி ஜெரினா பேகம் சென்னைக்கு இடமாற்றம்!
ஆரணி அருகே நெல்வயலில் டிராக்டர் உழுத விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆரணி டிஎஸ்பி ஜெரினா பேகம் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video

சென்னை : திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பெண் நிலத்தகராறு காரணமாக பெண் விவசாயியின் பயிர் விளைந்திருந்த நெல் வயலை நபர் ஒருவர் டிராக்டர் கொண்டு உழுத விவகாரத்தில் டி.எஸ்.பி ஜெரினா பேகம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்நிலையில் டிஎஸ்பி ஜெரினா பேகம் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஆரணியை அடுத்த காமக்கூர் கிராமத்தில் ஏற்பட்ட நிலத் தகராறை விசாரிக்கச் சென்ற டி.எஸ்.பி. ஜெரினா பேகம், கண் எதிரே பயிர் விளைந்திருந்த நெல் வயலை அத்துமீறி நபர் ஒருவர் டிராக்டரை இயக்கினர். இந்த செயலின் போது அங்கு விசாரணையில் இருந்த டிஎஸ்பி ஜெரினா பேகம் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவின.

இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி மகிழேந்தி, இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டதோடு, சம்பவ இடத்திலும், பாதிக்கப்பட்டவர்களிடமும் நேரில் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், டிஎஸ்பி ஜெரினா பேகம் பணியிலிருந்தால் சாட்சிகளை கலைக்கவும், விசாரணைக்கு இடையூறு செய்ய வாய்ப்பிருப்பதால் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என வேலூர் சரக காவல்துறை துணைதலைவர் வனிதாவுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில் டி.எஸ்.பி. ஜெரினா பேகத்தை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி வேலூர் சரக டி.ஐ.ஜி.வனிதா உத்தரவிட்டார். புதிய டிஎஸ்பியாக வேட்டவலம் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த செந்தில் பதவி உயர்வு அளிக்கப்பட்டு ஆரணி டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜெரினா பேகம் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் டிஜிபி ராஜேந்திரன் வெளியிட்ட பணியிட மாற்ற அறிவிப்பில் ஜெரினா பேகமும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications