"ஆவின்" வைத்தியின் நம்பிக்கையில் "பால்" ஊற்றிய உயர்நீதிமன்றம்... ஜாமீன் மனு டிஸ்மிஸ்!
சென்னை: ஆவின் பால் கலப்பட வழக்கில் சிறையில் உள்ள வைத்தியநாதன் உள்பட 8 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
ஆவின் நிறுவன பாலில் தண்ணீர் கலந்து பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப் பதிந்து, முறைகேட்டில் தொடர்புடைய, அ.தி.மு.க பிரமுகர் வைத்தியநாதன் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கின் முக்கிய நபரான வைத்தியநாதன், பால் பண்ணை நிர்வாகி அர்ச்சுனன் மற்றும் டிரைவர்கள் சென்னியப்பன், காத்தவராயன், தினகரன் ஆகியோர் ஜாமீன் கோரி விழுப்புரம் முதன்மை நீதித்துறை குற்றவியல் நடுவர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். அங்கு அது தள்ளுபடியாகி விட்டது.
இதையடுத்து உயர்நீதிமன்றத்தை அணுகினர். அதில், 90 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ளதால் ஜாமின் வழங்க வேண்டும் என்று வைத்தியநாதன் தனது மனுவில் கூறியிருந்தார். இந்த ஜாமீன் மனு மீது அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.
ஆவின் பால் கலப்பட வழக்கில் கைது செய்யப்பட்ட வைத்தியநாதன், கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications