'நைஸாக' ஸ்வீட் விலையைக் கூட்டிய ஆவின்...!: ஓ.பியின் 'தீபாவளி பரிசு'
சென்னை: தனியார் பால் விலைதானே உயர்ந்திருக்கிறது. நல்லவேளை ஆவின் பால் விலை உயரவில்லையே என்று மக்கள் நினைத்துக் கொண்டுள்ள நிலையில் அதிரடியாக ஸ்வீட் விலையை ஏற்றியுள்ளது ஆவின் நிர்வாகம்.
தீபாவளி சமயத்தில் போய் இப்படி ஸ்வீட் விலையை ஏற்றியுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கிட்டத்தட்ட ரூ. 40 வரை விலையை ஏற்றியுள்ளது ஆவின் நிர்வாகம். இதனால் இந்த தீபாவளிக்கு ஆவின் ஸ்வீட்கள் சற்று சூடாக இருக்கும்.

தீபாவளி சிறப்பு பலகாரம்...
ஆவின் நி்ர்வாகம் ஆண்டுதோறும் தீபாவளி சமயத்தில் சிறப்பு இனிப்பு வகைகளை செய்து விற்பனைக்கு விடும். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைக்கும்.

வழக்கமான ஸ்வீட்கள்...
வழக்கமாக, பால்கோவா, பேடா, மைசூர் பாகு, குலோப்ஜாமூன் போன்ற இனிப்புகளை தனது பார்லர் மூலம் விற்று வருகிறது ஆவின்.

தீபாவளிக்கு ஸ்பெஷல் ஸ்வீ்ட்கள்...
ஆனால் தீபாவளியின்போது ஸ்பெஷல் ஐட்டங்களைக் களம் இறக்குவது ஆவினின் வாடிக்கையாகும்.

இந்த வருடம் அல்வா...
இந்த வருடம், உலர் பருப்பு அல்வா, முந்திரி கேக், பாதாம் அல்வா, சாக்லேட் அல்வா, முந்திரி அல்வா என ஐந்து வகை அல்வாக்களை அது தயாரித்து விற்பனைக்கு விடுகிறது.

விலை ஜாஸ்திதான்...
ஆனால் விலைதான் அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ. 40 வரை கிலோவுக்கு உயர்த்தியுள்ளனர். இது முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீபாவளி பரிசு போல.
அம்மா ஜெயிலில் இருக்கும் நிலையில் யாரும் தீபாவளிக்குக் கூட ஸ்வீட் சாப்பிடக் கூடாது என்று விலையை ஏற்றினாார்களோ என்னவோ!












Click it and Unblock the Notifications