திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடரும் கருகலைப்பு.. 3 ஸ்கேன் மையத்திற்கு சீல்.. ஒருவர் கைது
திருவண்ணாமலை மாவட்டத்தில் சில இடங்களில் கடந்த 20 நாட்களாக கருகலைப்பு நடந்து வருவதால் பொதுமக்களிடம் பீதி நிலவி வருகிறது.
Recommended Video

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் சில இடங்களில் கடந்த 20 நாட்களாக கருகலைப்பு நடந்து வருவதால் பொதுமக்களிடம் பீதி நிலவி வருகிறது.
இந்த நிலையில் இன்று ஆரணி அருகே சட்டவிரோதமாக கருகலைப்பு செய்து கொண்ட 5 மாத கர்ப்பிணி பெண் பலி ஆகியுள்ளார். கருகலைப்பு செய்த படிப்புறிவில்லா நாட்டு வைத்திய பெண் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
கடந்த 2ம் தேதி டெல்லியிலிருந்து வந்த மத்திய குழு இந்தியாவிலேயே திருவண்ணாமலை மாவட்டத்தில்தான் அதிக கருகலைப்பு நடந்தேறி வருகின்றன என்று குறிப்பிட்டு இருக்கிறது.

சீல்
இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஸ்கேன் மையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் மூன்று ஸ்கேன் மையம் மற்றும் புவனேஸ்வரி என்ற மருத்துவமனையை சீல் வைத்தனர். செல்வாம்பாள் என்ற மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

அடுத்த கலைப்பு
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூர் பேருராட்சியில் கூலி தொழிலாளி கணேசன் மனைவி சுமதி 5 மாத கர்ப்பிணி பெண் சட்டவிரோதமாக கருவை கலைக்க முயற்சி செய்துள்ளார். இதற்காக ஆரணி அருகே உள்ள கஸ்தம்பாடி ஜெய லட்சுமியிடம் சென்றுள்ளார். அவர் சில வருடங்களாக நாட்டு வைத்தியம் செய்து வருகின்றார்.

இறப்பு
ஜெயலட்சுமி படிப்பறிவுயின்றி நாட்டு வைத்தியம் செய்து வருகின்றார். சுமதி அளிக்கும் பணத்திற்கு ஆசைபட்டு ஜெயலட்சுமி கருவை கலைக்க மருந்து அளித்துள்ளார். மருந்தை உட்கொண்ட சுமதி ஜெயலட்சுமி வீட்டிலேயே இறந்து விட்டார்.

போலீஸ் நடவடிக்கை
தகவலறிந்த வந்த களம்பூர் போலீசார் சுமதியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சட்டவிரோதமாக கருகலைப்பு செய்த ஜெயலட்சுமியை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications