For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதாவின் பணத்தைக் கொள்ளையடிக்கவே கொடநாடு கொலை - நீலகிரி எஸ்.பி முரளி ரம்பா: வீடியோ

ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் இருந்த பணத்தைக் கொள்ளையடிகவே அங்கு காவலர் கொலை செய்யப்பட்டார் என நீலகிரி காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா தெரிவித்துள்ளார்.

By Suganthi
Google Oneindia Tamil News

கோவை:கொடநாடு கொலைக்கு முக்கிய காரணம் பணத்தைக் கொள்ளையடிப்பதுதான் என இந்த வழக்கை விசாரித்து வரும் நீலகிரி காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் பணிபுரிந்த காவலாளி ஓம் பகதூர் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்தனர். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் என்பவர் கடுமையாகத் தாக்கப்பட்டார்.

 Accused planned to loot the money in Kodanadu bunglow

இந்த வழக்கில் இதுவரை 11 பேரை முக்கிய குற்றவாளிகளாக போலீசார் கைது செய்துள்ளனர். அதில் முக்கிய குற்றவாளியான சயான் என்பவர் காரில் வந்துகொண்டிருந்த போது, பாலக்காடு அருகே விபத்துக்குள்ளானதில் காயமடைந்தார். அவர் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரிடம் விசாரணை நடத்த வந்த நீலகிரி காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா,'' இந்தக் கொலைக்குக் காரணம் பங்களாவில் இருக்கும் பணத்தைத் திருட வேண்டும் என்ற காரணத்துக்காகத் தான் நடந்துள்ளது.

இந்த வழக்கில்தொடர்புடைய 11 பேரை கைது செய்துள்ளோம். காயமடைந்துள்ள சயான் குணமானதும் அவரும் கைது செய்யப்படுவார்'' என அவர் கூறினார்.

English summary
Accused planned to loot the money in Kodanadu bunglow said Nilgiri S.P Murali Ramba
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X