வருமான வரி அலுவலகத்தில் 3வது முறையாக ஆஜரான சரத்குமார்.. வரி பாக்கியை செலுத்துவதாக ஒப்புதல்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வருமான வரி அலுவலகத்தில் 3வது முறையாக வருமான வரி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தார்.
சென்னை: மூன்றாவது முறையாக வருமான வரி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்த சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தாம் செலுத்த வேண்டிய வரி பாக்கியை செலுத்துவதாக ஒப்புதல் அளித்துள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார் வீட்டில் கடந்த ஏப்ரல் 7ம் தேதியும், அவரது மனைவி ராதிகாவிற்கு சொந்தமான ராடன் நிறுவனத்தில் கடந்த 13ம் தேதியும் வரமான வரி சோதனை நடைபெற்றது. ஏறத்தாழ 15 மணி நேரம் கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமார் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்பட்டது.

ராதிகா சரத்குமார் ரூ. 5 கோடி அளவிற்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறப்பட்டநிலையில் அதனை செலுத்த ராதிகா ஒப்பு கொண்டார். மேலும் வருமான வரி அலுவலகத்தில் நேரில் ஆஜராக சரத்குமாருக்கு சம்மன் அளிக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே 2முறை சரத்குமார் விசாரணைக்கு ஆஜரானார்.
இந்நிலையில் மூன்றாவது முறையாக இன்று சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வருமான வரி அலுவலகத்தில் சரத்குமார் மூன்றாவது முறையாக விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இன்றைய விசாரணையின் போது வரி செலுத்தியதற்கான ஆவணங்களையும் சமர்பித்தார். மேலும் செலுத்த வேண்டிய வரி பாக்கியை விரைவில் செலுத்துவதாகவும் சரத்குமார் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து சரத்குமாரிடம் விசாரணை முடிந்ததது.
கடந்த ஏப்ரல் 6ம் தேதி அதிமுக துணை பொதுச் செயலளார் சரத்குமாருக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் அடுத்த நாளே சரத்குமார் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications