கொன்னுபுடுவேன்னு மிரட்டும் 'கேப்டன்'.. சென்னை போலீசில் பரபர புகார்
சென்னை: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பெயர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டுதான் இருக்கிறது.. இப்போது சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விஜயகாந்த் மீது கொலை மிரட்டல் விடுத்ததாகப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை சாலிகிராமம் கண்ணாபிரான் காலனியில் வசித்து வருபவர் விஜய கார்த்திக். நடிகரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயகாந்த் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்து இருந்தார்.

அதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலையானதையொட்டி இனிப்புகள் வழங்க தாம் முயற்சி செய்ததாகவும் ஆனால் தே.மு.தி.க.வினர் விஜயகாந்த் தூண்டுதலின் பேரில் பிரச்சனை செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று மீண்டும் கமிஷனர் அலுவலகத்தில் அவர் ஒரு புகாரை அளித்திருக்கிறார். அதில், விஜயகாந்த்தும், அவரது கட்சியினரும் தம்மை கொலை செய்யும் நோக்கத்துடன் மிரட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளதுடன் தமக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் அதில் கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications