நடிகர் ஒரு விரல் கிருஷ்ணாராவின் மகன் மர்மச்சாவு... பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் மீட்பு
சென்னை: நடிகர் ஒருவிரல் கிருஷ்ணாராவின் மகன், அழுகிய நிலையில் பூட்டிய வீட்டில் இருந்து சடலமாக மீட்கப் பட்டுள்ளார்.
1965ம் ஆண்டு வெளிவந்த ஒரு விரல் என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் கிருஷ்ணாராவ். அப்படத்தைத் தொடர்ந்து அனைவரும் அவரை, ‘ஒரு விரல்' என்ற அடைமொழியுடனேயே அழைக்கத் தொடங்கினர்.
இவரது மகன் சிவாஜிராவ் (45). சென்னை பழவந்தாங்கல் அவ்வையார் தெருவில் வாடகை வீட்டில் குடியிருந்த சிவாஜி ராவுக்கு திருமணம் ஆகவில்லை. சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தொடர்ந்து வாய்ப்புகள் தேடி வந்தார்.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக சிவாஜிராவின் வீடு பூட்டிக் கிடந்துள்ளது. வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கவே, அக்கம் பக்கத்தார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த பழவந்தாங்கல் போலீசார் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்றனர். அங்கே அழுகிய நிலையில் சிவாஜிராவின் உடல் மீட்கப்பட்டது.
சிவாஜி ராவ் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என பழவந்தாங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications