ஊழல் பத்திப் பேசும் பிரேமலதா... வெங்கடேஸ்வரா காலேஜோட ஐடி கணக்கை தர முடியுமா?- செந்தில் 'பொளேர்'
சென்னை: லஞ்சம், ஊழல் ஒழிப்பு பற்றி பேசும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, தன்னுடைய வெங்கடேஸ்வரா காலேஜூக்கான வருமான வரி கணக்கை ஒழுங்காக கட்டுகிறாரா? அதை வெளியிட முடியுமா? என்று அதிமுக பேச்சாளரும் நகைச்சுவை நடிகருமான செந்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் செந்தில் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
சத்யராஜ்தான் ஒரு படத்துல என்னங்கடா கறுப்பு எம்.ஜி.ஆர்., செவப்பு எம்.ஜி.ஆர்., மஞ்சள் எம்.ஜி.ஆர்-னு சொல்றீங்க? எனக்குத் தெரிஞ்சு ஒரே ஒரு எம்.ஜி.ஆர்-தான்டா' என்று டயலாக் பேசுவார்.
எனக்குப் பழைய விஜயகாந்த்தை நல்லாவே தெரியும். இவரு, அவரு இல்லை. மேடையில விஜயகாந்த் பேசணும்னு சொன்னதும் எந்திரிக்கிறார்... உடனே பிரேமலதாவும், மச்சானும் பின்னாடி இருந்து கையப்பிடிச்சு இழுக்குறாங்க. ஏதோ அவர் ரோபோ பொம்மை மாதிரி இருக்கார்.
இவங்க ரிமோட் வெச்சு அவரை இயக்குறாங்க. தே.மு.தி.க விஜயகாந்த்தோட கட்சி இல்லை. பிரேமலதா, சுதீஷ் குடும்பத்தோட கட்சி. அம்மா வேட்பாளர்கள் பட்டியலை முன்னாடியே அறிவிக்கலைனு பிரேமலதா கேட்குறாங்க. எப்போ அறிவிக்கணும்னு அம்மாவுக்கு நல்லாவே தெரியும்.
ஜனங்ககிட்டே உங்களோட பாச்சா பலிக்காது. பிரேமலதாவுக்கு நேரு, அண்ணா, எம்.ஜி.ஆர்., ராஜீவ் காந்தி யாரைப் பத்தியாவது தெரியுமா? நேர்ல பார்த்து இருக்காங்களா? மேடையில ஆ... ஊன்னு ஆக்ரோஷமா கத்துறாங்க. நீங்க நேத்து ஆரம்பிச்ச கட்சி. ஏற்கெனவெ ரெண்டு காலேஜ் நடத்துறீங்க. ஊழல் ஊழல்ன்னு சொல்றீங்களே. வெங்கடேஸ்வரா காலேஜ் கட்டினீங்க. அதுக்காக இன்கம்டாக்ஸ் சரியா கட்டுனீங்களா? கணக்குக் காட்டுங்க. ஆந்திரா பக்கம் ரெண்டு காலேஜ் கட்டிகிட்டு அப்படியே உங்க ஊர்ப்பக்கம் போயிடலாம்னு பாக்குறீங்களா? நான் பிரேமலதாவைப் பார்த்துக் கேட்குறேன்... ‘விஜயகாந்த்தை வெச்சுப் படம் எடுத்து, நான் நல்லா வாழ்ந்தேன்'னு ஒரே ஒரு தயாரிப்பாளரைக் காட்டுங்கப் பார்ப்போம். ஜனங்களை என்ன இளிச்சவாயன்னு நினைச்சுக்கிட்டு இருக்காங்களா?
இவ்வாறு நகைச்சுவை நடிகர் செந்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.