வெள்ளத்தின் போது முஸ்லிம் சோறு போட்டாங்களே..அது தேச விரோதமா? - சிம்பு சுளீர் கேள்வி
போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை தேசவிரோதிகள் என சித்தரிப்பதற்கு நடிகர் சிம்பு கண்டனம் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கு கிடைத்த வெற்றியை கொண்டாட முடியாமல் போனதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை தேச விரோதிகள் என சித்தரிப்பதற்கு நடிகர் சிம்பு கண்டனம் தெரிவவித்துள்ளார். கடந்த ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது இஸ்லாமியர்கள் செய்த உதவியும் தேச விரோதமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் திடீரெனதடியடி நடத்தி கலைத்தனர். இதனால் சென்னையில் கலவரம் ஏற்பட்டது. இதில் ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.
போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமான மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். காவல்துறையின் இந்த அடாவடிக்கு அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

தேசவிரோதிகளாக சித்தரிப்பதா?
இந்நிலையில் நடிகர் சிம்பு சென்னைல் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை தேச விரோதிகளாக சித்தரிப்பது கண்டிக்கத்தக்கது.

வெள்ளத்தில் உதவியது தேச துரோகமா?
சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது ஏராளமான இஸ்லாமியர்கள் உணவு வழங்கினர். வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்களுக்கு உதவி செய்தனர். அதுவும் தேச துரோகமாக?

மாணவர்கள் தானாகவே போராடினர்
மாணவர்கள் தானாகவே போராடினர். யாரும் தலைவர்கள் கிடையாது. ஒற்றுமையாக திரண்டு மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்காக போராடினர். போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி கொண்டாடப்பட வேண்டியிருக்க ஒன்று.

சட்டத்தை விளக்கியிருக்க வேண்டும்
காவல்துறை அவகாசம் வழங்கியிருந்தால் அசம்பாவிதம் நடந்திருக்காது. சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் அரசு பிரதிநிதிகள் யாராவது விளக்கியிருக்கலாம். சட்டத்தைப்பற்றி விளக்கி கூறியிருந்தால் வன்முறை ஏற்பட்டிருக்காது.

மாணவர்கள்தான் வன்முறையில் ஈடுபட்டார்களா?
மாணவர்கள்தான் வன்முறையில் ஈடுபட்டார்களா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். ஜல்லிக்கட்டுக்கான வெற்றியை கொண்டாடாமல் போனது வேதனையளிக்கிறது. இவ்வாறு நடிகர் சிம்பு செய்தியாளர்களிடம் பேசினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications