முதல்வர் ஜெயலலிதாவுக்கு முதல் ஆளாய் பொக்கே அனுப்பி வாழ்த்திய சிவகுமார்!
சென்னை: தேர்தலில் வென்று மீண்டும் முதல்வராகும் ஜெயலலிதாவுக்கு முதல் ஆளாய் மலர்க் கொத்து அனுப்பி வாழ்த்துத் தெரிவித்தார் நடிகர் சிவகுமார்.
மே 16-ம் தேதி தேர்தல் நடந்த போது வாக்களித்துவிட்டு வெளியில் வந்த சிவகுமார், "குடும்பத்தலைவனைக் குடிகாரனாக்கி அவன் ஈரலைப் பெரிதாக்கி அவனை சாகடித்துவிட்டு இலவசங்கள் என்ற பெயரில் ஏன் வாக்கரிசிப் போடுகிறீர்கள். யார் ஜெயித்து வந்தாலும் முதலில் மதுவிலக்கை அமல்படுத்துங்கள். அல்லது படிப்படியாகவாவது அமல்படுத்துங்கள்," என்றது நினைவிருக்கலாம்.

நடிகர் சிவகுமார் குடும்பம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானதும் கூட.
இந்த நிலையில் மீண்டும் முதல்வராக ஜெயலலிதாவே தொடர்கிறார். ஜெயலலிதாவின் இந்த வெற்றிக்கு திரையுலகிலிருந்து முதல் நபராக வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் சிவகுமார். முதல்வர் ஜெயலலிதாவின் சரித்திர வெற்றிக்காக அவருக்கு மலர்க்கொத்தும் அனுப்பியுள்ளார்.
மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவேன் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துள்ள ஜெயலலிதா, சிவகுமாரின் கோரிக்கையை பரிசீலிப்பாரா? பார்க்கலாம்!












Click it and Unblock the Notifications