ஆர்கே நகர் தேர்தலில் நின்ற நானும் அரசியல்வாதிதான்... விஷால் சீரியஸ் பேட்டி!
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த தானும் அரசியல்வாதி தான் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம் : சென்னை ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த தானும் அரசியல்வாதி தான் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். இதே போன்று நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஆரோக்கியமான விஷயம் என்றும் அவர் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த பழவூரில் தனது ரசிகரின் இல்ல நிகழ்ச்சியில் விஷால் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களுக்கு நல்ல செய்ய வேண்டும் என்பதற்காகவே நடிகர்கள் அரசியலுக்கு வருவதாகவும், நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் ஆகியோரில் யார் நல்லது செய்கிறார்களோ அவர்களுக்கு தனது ஆதரவு இருக்கும் என்றும் தெரிவித்தார்.

சென்னை ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த தானும் அரசியல்வாதி தான் என்றும் விஷால் கூறியுள்ளார். ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிட விஷால் வேட்பு மனு தாக்கல் செய்து அது நிராகரிக்கப்படும் வரை சினிமாவை மிஞ்சும் வகையில் அதிரடி திருப்பங்கள் அரங்கேறின. விஷாலின் மனு ஏற்பு, நிராகரிப்பு விளையாட்டில் கடைசியில் விஷாலுக்கு டாட்டா காட்டப்பட்டது. ஆனால் சுயேச்சை வேட்பாளரை ஆதரிப்பேன் என்று சொன்னவர் அதன் பிறகு ஆர்கே நகர் பக்கமே வரவில்லை. இந்நிலையில் தான் இப்படி ஒரு கருத்தை விஷால் கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications