நடிகை 'நமீதாவை' தென் சென்னை வேட்பாளராக்க முயற்சித்த காங்கிரஸ்!!
சென்னை: தமிழகத்தில் வேட்புமனுத் தாக்கல் முடிவடையும் ஒருவழியாக தென் சென்னை லோக்சபா தொகுதியில் வேட்பாளரை அறிவித்துவிட்டது காங்கிரஸ். ஒருகட்டத்தில் நடிகை நமீதாவை வேட்பாளராக்கவும் காங்கிரஸ் பகீரத பிரயத்தனம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் கூட்டணி கட்சி எதுவும் இல்லாமல் தனித்துவிடப்பட்ட காங்கிரஸ் கட்சியால் தென் சென்னை தொகுதிக்கு வேட்பாளரை கடைசிநிமிடம் வரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இத்தொகுதியில் போட்டியிட ராஜாஜியின் பேரன் கேசவன், ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் சி.கே. பெருமாள், மயிலை பெரியசாமி ஆகியோர் விருப்பம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நடிகை நமீதா தாம் அரசியலில் குதிக்கப் போகிறேன் என்று அறிவித்த கையோடு குஷ்புவிடம் ஆலோசனை கேட்டாராம்.
குஷ்புவிடம் யோசனை
குஷ்புவும் காங்கிரஸ் அல்லது பாஜகவில் சேருவார் என்று செய்திகள் அடிபட்ட நிலையில் டெல்லிக்கு போயிருந்தார். அப்போது நமீதா, குஷ்பூவை தொடர்புகொள்ள அவரோ, மீரட் தொகுதியில் போட்டியிடும் நக்மாவை பிடித்தால் காங்கிரஸில் சேரலாம் என்று அட்வைஸ் செய்தாராம்.
நக்மா மூலம் காங். தொடர்பு
நக்மா மூலமாக சோனியாவின் ஆலோசகர் அகமது படேல் தொடர்பு நமீதாவுக்குக் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக டெல்லியில் நமீதா முகாமிட, பேசாமல் அவரையே தென் சென்னை தொகுதி வேட்பாளராக அறிவித்துவிடலாம் என்று யோசித்திருக்கிறது காங்கிரஸ்.
நமீதாவா? தொப்பி கார்த்திக்கா?
நமீதாவை வேட்பாளராக்குவது தொடர்பாக ஜி.கே.வாசனிடமும் காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடத்தியிருக்கிறது. அதே நேரத்தில் தென்சென்னை தொகுதியில் தொப்பி கார்த்திக்கை நிறுத்தலாமா என்ற யோசனையும் டெல்லியில் நடந்துள்ளது.
நமீதாவா? தொப்பி கார்த்திக்கா?
நமீதாவை வேட்பாளராக்குவது தொடர்பாக ஜி.கே.வாசனிடமும் காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடத்தியிருக்கிறது. அதே நேரத்தில் தென்சென்னை தொகுதியில் தொப்பி கார்த்திக்கை நிறுத்தலாமா என்ற யோசனையும் டெல்லியில் நடந்துள்ளது.
நமீதா ஓகேதான்..
ஆனால் தொப்பி கார்த்திக், தென் சென்னையை வேண்டாம் என்று சொன்னதால் நமீதாவை களமிறக்கிவிடலாம் என்று முடிவு செய்ததாம் காங்கிரஸ் மேலிடம்
கடும் எதிர்ப்பால் பின்வாங்கல்
இந்த செய்தி தெரிந்த தமிழ் அமைப்பினரும் சினிமா பிரபலங்கள் சிலரும், காங்கிரஸில் சேர்ந்து வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டாம் என்று எச்சரித்திருக்கின்றனர்.
காங்கிரஸே பிடிக்காதே.. நமீதா
இதனால் நமீதா பின்வாங்கிவிடதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக நமீதா தரப்பில் விசாரித்த போது, எனக்கு காங்கிரஸே பிடிக்காது.. அதெப்படி அந்த கட்சியில் சேருவேன் என ஒரே போடாக போட்டுவிட்டார். ஒருவழியாக காங்கிரஸ், தென் சென்னைக்கு வேட்பாளரை கண்டும் பிடித்துவிட்டது. நமீதாவும் நிம்மதியாக இருக்கிறாராம்
நூற்றாண்டு கடந்த காங்கிரஸுக்கு வந்த சோதனையப்பா!!