கடவுள் மறுப்பாளர்கள் மத நம்பிக்கைகளில் தலையிடக் கூடாது.. என்ன உரிமையிருக்கு?.. ஆதீனங்கள் கேள்வி
மயிலாடுதுறை: கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்கள் பாரம்பரியமான மத நம்பிக்கை நிகழ்ச்சிகளில் தலையிடக்கூடாது, பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி குறித்து தருமபுரம் திருவாவடுதுறை, செங்கோல் மற்றும் தொண்டை மண்டல ஆதினங்கள் கூட்டாக செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தனர்.
Recommended Video
மயிலாடுதுறையை அடுத்த தருமபுர ஆதீனத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த சைவ ஆதீன மடத்தில் பல நூறு ஆண்டுகளாக குருபூஜை தோறும் நடைபெற்று வரும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் ஆதீன மடாதிபதி பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த ஆண்டு 22 ஆம் தேதி நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகத்தின் எதிர்ப்பை அடுத்து தடை விதித்து கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டிருந்தார்.

கண்டனம்
இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற முதல் அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டதாக தருமபுர ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்திருந்தார்.

ஆதீனங்கள் சந்திப்பு
இதுகுறித்து தருமபுர ஆதீனம் மடாதிபதி, திருவாவடுதுறை ஆதினம் மடாதிபதி, செங்கோல் ஆதீனம் மடாதிபதி, தொண்டை மண்டல ஆதீன மடாதிபதி ஆகியோர் குத்தாலம் உக்தவேதீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் பேசுகையில், பண்டைய காலம் தொட்டு பல்வேறு தமிழ் நூல்களில் பல்லக்குத் தூக்கும் நிகழ்ச்சி பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

குருவுக்கும் சீடனுக்கும் உள்ள உறவு
குருவுக்கும் சீடனுக்கும் உள்ள உறவை இந்த நிகழ்ச்சியை உறுதிப்படுத்துகிறது. மனிதனை மனிதன் தூக்கும் நிகழ்ச்சியாக இதனை பார்க்கக் கூடாது. தற்போது வரை சபரிமலையில் செல்லும் வயதானவர்களை டோலி எனப்படும் சாதனத்தில் தோளில் தூக்கிச் செல்லும் வழக்கம் உள்ளது.

ஆதீன மடம்
ஆனால் ஆதீன மடத்தை சுற்றியுள்ள நான்கு வீதிகளில் சில மணி நேரங்கள் மட்டுமே இந்த பாரம்பரிய நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மரபுவழி வழிபாடுகளில் யாரும் தலையிடக்கூடாது என்றும், கடவுள் மறுப்பாளர்கள் வழிபாட்டில் தலையிடுவதற்கு என்ன உரிமை இருக்கிறது. யாரையும் கட்டாயப்படுத்தி பல்லக்குத் தூக்கும் செல்லவில்லை என்றும் அப்போது அவர்கள் தெரிவித்தனர்.
-
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே!












Click it and Unblock the Notifications