அமாவாசை போய்ருச்சு..'அம்மா'விடமிருந்து தப்பிச்சுட்டோம்.. அதிமுக வேட்பாளர்கள் நிம்மதி!
சென்னை: அதிமுக வேட்பாளர்கள் மாற்றம் நிகழும் என வதந்தி கிளம்பிய அமாவாசை தினத்தில் அது போன்ற எந்த சம்பவமும் நடைபெறாததால் அக்கட்சி வேட்பாளர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
அதிமுகவில் அமாவாசை தினத்தன்று பல முக்கிய முடிவுகளை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா எடுத்து வருவதாக கூறப்படுகின்றது.

காரணம், அமாவாசை தினம் ஜோதிட ரீதியாக நல்ல நாள் என்று கூறப்படுகின்றது. அன்றைய தினம் துவங்கும் நிகழ்ச்சிகள் எல்லாம் வெற்றியை கொடுக்கும் என்பது ஜோதிடர்கள் பலரின் நம்பிக்கை.
தமிழகத்தில் அதிமுக அரசு பொறுப்பு ஏற்றது முதல் அமாவாசை தினம் அன்று பல நல்ல நிகழ்ச்சிகள் துவக்க விழாவும், சில தருணங்களில் அமைச்சரவை மாற்றமும் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் அமாவாசை என்பதால், அன்றைய தினம் ஆளுங்கட்சி வேட்பாளர்கள் சிலர் மாற்றப்படலாம் என அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக உள்ள சிலர் அரசியல் திரியை கொழுத்திப் போட்டனர். இந்த தகவல் காட்டுத் தீ போல நாலா திசை எங்கும் பரவ, அதிமுக வேட்பாளர்கள் சிலர் கடும் கலக்கம் அடைந்தனர். ஒருவருக்கு ஒருவர் மிக ரகசியமாக போன் போட்டு விசாரித்துக் கொண்டனர்.
ஆனால் எதிர்பார்த்தபடி அமாவாசை தினமான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று வேட்பாளர்கள் மனம் வருந்துமாறு எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் உற்சாகமான வேட்பாளர்கள் சிலர், அப்பாடா.. பாதி கண்டத்தை தாண்டிவிட்டோம் என்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
மீதி கண்டனம் என்ன வென்று விசாரித்தால் அது தாங்க, வேட்புமனு கடைசி தினமான ஏப்ரல் 5ம் தேதி தான் என்று தெரிவித்தனர். கராணம் அன்று தான் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தினமாம்.
அரசியல் இது எல்லாம் சகஜம்பா என ஒரு கும்பல் பலரையும் சுற்றலில் விட்டபடியே உள்ளது.












Click it and Unblock the Notifications