ஆவுடையார்கோவிலில் அதிமுக, காங்கிரஸ் திடீர் மோதல்: பரபரப்பு!
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: ஆவுடையார்கோவில் அருகே அதிமுக, காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரத்தில் ஒருவரை ஒருவர் திட்டி மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் அதிமுக வேட்பாளர் அன்வர் ராஜாவை ஆதரித்து நடிகை வாசுகி பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருநாவுக்கரசர் அவர்களை ஆதரித்து மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் அங்கே பிரச்சாரம் செய்ய வந்தார்.
இரு தரப்பினரும் ஒரே நேரத்தில் பிரச்சாரம் செய்து ஒருவரை ஒருவர் பார்த்து கடுமையாக திட்டிக் கொண்டார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது . அப்போது பாதுகாப்புக்காக வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications