கூட்டணி கட்சிக்கு தொகுதியை மாற்றிய ஜெ: ஒட்டன்சத்திரத்தில் அதிமுக- ம.நே.ஜ. கட்சிக்கு வேலூர்!!
சென்னை: வேட்பாளர்களை அதிரடியாக மாற்றி வரும் அதிமுக தற்போது தொகுதிகளையும் கூட்டணிக் கட்சிகளுடன் மாற்றி வருகிறது. மனிதநேய ஜனநாய கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஒட்டன்சத்திரம் தொகுதியில் அதிமுக போட்டியிடும் என்றும் இதற்கு பதிலாக அக்கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலில் அதிமுக 227 இடங்களிலும் கூட்டணிக் கட்சிகள் 7 இடங்களிலும் போட்டியிடுகின்றன. கூட்டணிக் கட்சியான தமீமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒட்டன்சத்திரம் மற்றும் நாகை தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன.

ஒட்டன்சத்திரத்தில் அதிமுக
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலரும் முதல்வருமான ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில், மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஒட்டன்சத்திரம் தொகுதியில் அதிமுக போட்டியிடும் என்றும் அதற்கு பதிலாக அதிமுக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட வேலூர் தொகுதி மனித நேய ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

கிட்டுசாமி
மேலும் ஒட்டன்சத்திரத்தில் அதிமுக வேட்பாளராக கே.கிட்டுசாமி போட்டியிடுவார் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதன்படி மனிதநேய ஜனநாய கட்சியானது நாகை மற்றும் வேலூர் தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

சக்கரபாணியை வீழ்த்த...
ஒட்டன்சத்திரம் சட்டசபை தொகுதியில் கடந்த 1996-ம் ஆண்டு முதல் 4 முறை தொடர்ந்து திமுகவின் அர. சக்கரபாணியே வெற்றி பெற்று வருகிறார். 1980களில் அதிமுகவின் கோட்டையாக இருந்த ஒட்டன்சத்திரத்தில் திமுகவின் சக்கரபாணி அசைக்க முடியாத சக்தியாக விஸ்வரூபமெடுத்து நிற்கிறார்.
அங்கு மனித நேய ஜனநாயகக் கட்சி நின்றால் நிச்சயம் சக்கரபாணி எளிதாக வென்றுவிடுவார் என்பதால் அதிமுக போட்டியிடும் சூழலில் கடுமையான போட்டியை உருவாக்க முடியும் எனவும் வியூகம் வகுத்து இந்த மாற்றத்தை ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

6 தொகுதிகளில்...
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், நத்தம், ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை ஆகிய 6 தொகுதிகளில் திமுகவுடன் நேரடியாக மோதுகிறது அதிமுக. வேடசந்தூர் தொகுதியில் மட்டும் காங்கிரஸுடன் மோதுகிறது அதிமுக.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications