மின் உற்பத்தியை பெருக்க ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்கவில்லை அதிமுக அரசு.. தேமுதிக
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து திருப்பூர் கோர்ட் வளாகத்தில் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும், எம்.எல்.ஏவுமான வி.சி.சந்திரகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் நிலவிவரும் கடுமையான மின்வெட்டுப் பிரச்சனையில் இருந்து முதல்வர் ஜெயலலிதா தப்பித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக மத்திய அரசை வசைபாடிக்கொண்டிருக்கிறார். இது மக்களை ஏமாற்றும் செயல்.
தமிழகத்தில் மின் உற்பத்தியைப் பெருக்குவதற்காக ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்கவில்லை. தமிழகத்தில் மின்பற்றாக்குறை தீர்க்கப்பட்டதாகச் சொல்லி தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது தேமுதிகவைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் சட்டமன்றத்தில் பாராட்டின.
மக்கள் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்படுகிறது. மக்கள் மன்றத்தில் பேசினால் வழக்கு போடுகிறார்கள். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது 32 வழக்குகள் உள்ளன என்றார் அவர்.












Click it and Unblock the Notifications