2வது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு ஜெ. அரசு போட்ட முதல் அவதூறு வழக்கு!
சென்னை: முதல்வர் ஜெயலலிதா 2வது முறையாக ஆட்சியைப் பிடித்த பிறகு முதல் அவதூறு வழக்கு நக்கீரன் இதழ் மீது பாய்ந்துள்ளது.
கண்டெய்னர் லாரிகளில் பணம் கொண்டு செல்லப்பட்டது தொடர்பாக நக்கீரன் வெளியிட்ட செய்தியைத் தொடர்ந்து இந்த அவதூறு வழக்குப் பாய்ந்துள்ளது.

ஜெயலலிதா அரசு மீண்டும் அமைந்த பின்னர் ஊடகங்கள் மீது போடப்பட்டுள்ள முதல் அவதூறு வழக்கு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில், முதல்வர் ஜெயலலிதா சார்பில் கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மே 23ம் தேதியிட்ட நக்கீரன் பத்திரிக்கையில், கண்டெய்னரில் பணம் பதுக்கல்; மறைக்கப்பட்ட உண்மைகள். சிக்கிய ஆவணங்கள் என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தி பொய்யானது.
தமிழக மக்களின் பேராதரவுடன், நன் மதிப்பை பெற்று மீண்டும் இரண்டாவது முறையாக முதல்வர் பதவியேற்று உள்ள ஜெயலலிதாவின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக வேண்டுமென்றே உள் நோக்கத்துடன் அவதூறாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியினால், முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, அவதூறான செய்தியை வெளியிட்ட நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் நக்கீரன் கோபால், சிறப்பு செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ், செய்தியாளர் அருண் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, சென்னை முதன்மை செசன்ஸ் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விரைவில் விசாரணைக்கு வரும்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications