விவாதங்களில் பங்கேற்பவர்களின் கருத்து கட்சியின் கருத்து இல்லைங்கோ... ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டறிக்கை!
அதிமுகவின் பெயரை பயன்படுத்தி ஊடகங்களில் சிலர் கூறுவது கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்து இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்
Recommended Video

சென்னை : அதிமுக என்ற அடையாளத்துடன் ஊடகங்களில் சிலர் கூறுவது கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்து இல்லை என்று அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர். அதிமுக சார்பில் கருத்து கூற யாரும் நியமிக்கப்படவில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி இன்று கூட்டாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது : அதிமுக சார்பில் நாளிதழ் மற்றும், வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட அனைத்து சமூகத் தொடர்பு ஊடகங்களிலும் சிலர் விவாதங்களில் பங்கேற்கின்றனர். கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்துகளை எடுத்துரைக்க புயித செய்தித் தொடர்பாளர்கள் குழு விரைவில் அமைக்கப்பட உள்ளது.

இந்தக் குழுவில் இடம்பெறுபவர்கள் மட்டுமே அரசியல், சமூக பொருளாதார விவகாரங்கள் குறித்த கழகத்தின் நிலைப்பாடுகளை எடுத்துக் கூறுவார்கள் என்று கடந்த நவம்பர் 28ம் தேதி வெளியிட்ட செய்திக் குறிப்பிலேயே தெரிவிக்கப்பட்டிருந்தது. அதிமுக ஆதரவாளர்கள், கழகதின் தோழமைகக் கட்சியினர் என்பது போன்ற அடையாளங்களை கூறிக்கொண்டு சிலர் ஊடகங்களில் கூறிவரும் கருத்துகள் கழகத்தின் அதிகாரப்பூர்வ கருத்துகள் அல்ல.
அப்படியான ஒரு அடையாளத்தை கூறிக்கொண்டு தங்கள் கருத்துகளை கட்சியின் கொள்கை நிலைப்பாடாக எடுத்துக்கூற எந்த ஒரு நபருக்கும் அனுமதியோ, ஒப்புதலோ தரப்படவில்லை. எனவே அதிமுக சார்பில் யாரும் நியமிக்கப்படவில்லை என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில்












Click it and Unblock the Notifications