மதுரை பொதுப் பணித்துறை அலுவலகத்தில் பயங்கரம்- அதிமுகவினர் அடிதடி.. அரிவாள் வெட்டு!
மதுரை: மதுரை தல்லாகுளத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் அலுவலக வளாகத்தில் டெண்டர் தொடர்பாக ஆளுங்கட்சியினரிடையே கடும் மோதல் வெடித்தது. இதில் சிலருக்கு அரிவாள் வெட்டும் விழுந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளர் அலுவலகம் தல்லாகுளத்தில் உள்ளது. பென்னி குக் வளாகம் என்று இதற்குப் பெயர். அந்த பென்னிகுக் வளாகத்தில் இன்று அதிமுகவினர் பெரும் ரகளை செய்து விட்டனர்.

மதுரை அரசு மருத்துவமனை டெண்டர் தொடர்பாக இன்று அங்கு பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது பொதுப்பணித்துறை ஒப்பந்தகாரரான குணசேகரன் தரப்புக்கும், மற்றொரு ஒப்பந்தக்காரரான காந்தி தரப்பினருக்கும் போட்டி ஏற்பட்டது. இது மோதலமாக மாறியது. இதையடுத்து இரு தரப்பும் அரிவாள் உள்ளிட்டற்றுடன் அடித்துக் கொண்டனர். இரு தரப்புமே அதிமுகவைச் சேர்ந்தவர்களாம்.
இதில் காந்தி தலையில் அரிவாள் வெட்டு விழுந்தது. அவருடன் வந்த போஸ் என்பவரும் வெட்டப்பட்டார். அரசு அலுவலகத்தில் ஆயுதங்களுடன் மோதல் மூண்டது குறித்து போலீஸாருக்குத் தகவல் போனது. இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர்.
விசாரணை நடத்தி குணசேகரன், பாண்டியன், ஆழ்வார் ஆகியோரைக் கைது செய்தனர். பென்னி குக் வளாகத்தில் அரிவாள்களுடன் அதிமுகவினர் மோதிக் கொண்டதால் பொதுப்பணித்துறை வளாகமே பரபரப்பாகி விட்டது.












Click it and Unblock the Notifications