திருவள்ளூரில் அமைச்சர் ரமணாவின் தம்பி வெட்டிக் கொலை

Subscribe to Oneindia Tamil

ADMK minister Ramana's relative hacked to death
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே அமைச்சர் ரமணாவின் உறவினரை 5 பேர் வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வேப்பம்பட்டைச் சேர்ந்த ஜெயராமன் மகன் ரவி(45). பெருமாள்பட்டில் சிமெண்ட் கடை வைத்து நடத்தி வந்தார். இது தவிர ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். அவர் இன்று பெருமாள்பட்டில் இருந்து பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது 2 பைக்குகளில் 5 பேர் வந்து அவரின் வாகனத்தை மறித்தனர்.

அந்த 5 பேரும் ரவியை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலை செய்யப்பட்ட ரவி பால்வளத் துறை அமைச்சர் ரமணாவின் சித்தப்பா மகன் ஆவார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+