ஆளுநர் முன்பு குற்றவாளிகள் ஜெ., சசியை வாழ்த்தி கோஷம்.. முதல் வரிசையில் ஃபெரா தினகரன்!
பெரா வழக்கு குற்றவாளி டிடிவி தினகரன் முதல் வரிசையில் அமர்ந்திருக்க, குற்றவாளிகள் ஜெயலலிதா, சசிகலாவிற்கு வாழ்த்து முழக்கத்தோடு புதிய அமைச்சரவை பதவியேற்றது.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றது. அப்போது சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள குற்றவாளிகள் ஜெயலலிதா, சசிகலாவிற்கு வாழ்த்து முழக்கம் ராஜ்பவனை அதிரவைத்தது. பெரா வழக்கில் அபராதம் விதிக்கப்பட்டுள்ள டிடிவி தினகரன் முதல்வரிசையில் அமர்ந்திருந்தார்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார். 2 மாதங்கள் பதவி வகித்த அவர் திடீரென ராஜினாமா செய்தார். இதையடுத்து அதிமுக சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.

சசிகலா தம்மை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநர் வித்யாசாகர் ராவை கேட்டுக் கொண்டார். ஆனால் சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு நிலுவையில் இருந்ததால் அவரை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதியன்று சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அதிமுக சட்டசபை குழு தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டு ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழக முதல்வராக ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றனர். வழக்கம் போல கோரஸாக அமைச்சர்கள் பதவியேற்றனர். முதல்வராக கடவுள் மீது ஆணையாக பதவியேற்ற உடன் வாழ்த்து கோஷம் ராஜ்பவனை அதிரவைத்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, சிறையில் உள்ள சசிகலா ஆகியோருக்கு வாழ்த்து முழக்கங்கள் எழுப்பினர்.
இந்த பதவியேற்பு விழாவின் போது டிடிவி தினகரன் முதல்வரிசையில் அமர்ந்திருந்தார். இவர் பெரா வழக்கு குற்றவாளி, ரூ.28 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதிமுக துணை பொதுச்செயலாளராக உள்ளதால் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார்.
அதிமுக அரசு அமைந்து கடந்த 10 மாதத்தில் 3வதாக முதல்வராகியுள்ள எடப்பாடி பழனிச்சாமி 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். கடந்த 10 நாட்களாக தமிழக அரசியலில் நீடித்த குழப்பம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது என்றே கூறலாம்.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications