மோடி உத்தரவு.. ஜெ. அனுமதி... கிராமங்களைத் தத்தெடுத்த 37 அதிமுக எம்பிக்கள்!
சென்னை: தமிழ்நாட்டில் அ.தி.மு.க எம்.பி.க்கள் ஒவ்வொரு கிராமங்களை தத்தெடுத்து அவற்றை மேம்படுத்த கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, அறிவித்த திட்டம்தான் சன்சாத் ஆதார்ஷ் கிராம யோஜனா திட்டம்.

இத்திட்டத்தின் கீழ் வரும் 2016ஆம் ஆண்டிற்குள், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தனது தொகுதிக்குட்பட்ட வளர்ச்சி அடையாத ஒரு கிராமத்தை தத்தெடுத்து, அதன் உள்கட்டமைப்பினை மேம்படுத்த வேண்டும். 3 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரம் பேர் கொண்ட வளர்ச்சி அடையாத கிராமங்களை மற்றும் ஆயிரத்திலிருந்து 5 ஆயிரம் பேர் கொண்ட, மலைகிராமங்களை இத்திட்டத்தின் கீழ் தத்தெடுக்கலாம்.
இதைத் தொடர்ந்து எம்.பிக்கள் தத்தமது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கிராமங்களைத் தத்தெடுத்து வருகின்றனர். சச்சின் டெண்டுல்கர் ஒரு கிராமத்தைத் தத்தெடுத்துள்ளார்.
இந்த நிலையில் தமிழகத்தில் 37 அதிமுக எம்.பிக்களும் ஆளுக்கு ஒரு கிராமத்தை தத்தெடுத்துள்ளனர். குறைந்தது 3 ஆயிரம் மக்கள் தொகை முதல் 5 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட கிராமமாக பார்த்து தத்தெடுத்து வளர்ச்சி பணிகளை செய்து கொடுக்க வேண்டும். அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நிறைவேறும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அ.தி.மு.க. எம்.பி.க்களுக்கு கட்சி மேலிடம் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து இதை அவர்கள் செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. சார்பில் 37 லோக்சபா எம்.பி.க்களும், 11 மேல் சபை எம்.பி.க்களும் உள்ளனர்.
இதில் லோக்சபா எம்.பி.க்கள் 37 பேரும் அவர்களது தொகுதியில் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அதன் விவரத்தை அந்தந்த மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
-
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications