பிரிந்து கிடக்கும் அதிமுக எம்.பிக்கள்... வில்லத்தனமாக யோசிக்கும் பாஜக!
பிரிந்து கிடக்கும் அதிமுக எம்.பிக்களை வைத்து விளையாட்டு காட்ட பாஜக வில்லத்தனமாக யோசிப்பதாக கூறப்படுகிறது.
சென்னை: அதிமுக பிரிந்து கிடக்கும் நிலையில் அதன் 50 எம்.பிக்களை வைத்து பாஜக வில்லத்தனமான ஒரு விளையாட்டு விளையாட யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடியை கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சந்திக்கச் சென்றார். தமிழகத்துக்கு வறட்சி நிவாரண உதவி பெறவும் 'நீட்' தேர்வுக்கு தடை பெறவும் சென்றார் என்பதுதான் அவரது பயணத்துக்கு சொல்லப்படட் காரணங்கள்.
பிரதமர் மோடியைச் சந்திக்கச் சென்ற தமிழக முதல்வர் எடப்பாடியின் பயணம் எந்த பயனையும் பெற்றுத் தரவில்லை என்றும் விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

ஒருநாள் முன்னதாக சென்றது ஏன்?
வழக்கமாக பிரதமரை சந்திக்க சில விதிமுறைகள் இருக்கின்றன. அதேபோல் முதல்வரின் டெல்லி பயணத்துக்கும் விதிமுறைகள் இருக்கின்றன. பிரதமரை சந்திக்க டெல்லி செல்லும், எந்த முதல்வரும் சரியாக 4 மணிநேரத்துக்கு முன்பாக டெல்லி சென்று சேர்வது வழக்கம்.

அதிகாரிகள் லேட்
ஆனால், டெல்லியில் முதல்வர் எடப்பாடியாருக்கு எந்த நிகழ்ச்சிகளும் இல்லாத நிலையில் பிப்ரவரி 27ஆம் தேதி சந்திப்புக்கு 26ஆம் தேதியே சென்று விட்டார். ஆனால், முதல்வரின் செயலாளர்கள் சிவ்தாஸ் மீனா மற்ரும் விஜயகுமார் ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகள் 27ஆம் தேதி காலையில் தான் சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

19 எம்.பிக்கள் மட்டுமே வருகை
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன், அமைச்சர்கள் சி.வி.சண்முகம், உடுமலை ராதாகிருஷ்ணன், வேலுமணி ஆகியோர் உடன் சென்றிருந்தனர். முதல்வரை வரவேற்க, டெல்லியில் சசிகலா அணி எம்.பிக்கள் 19 பேர் மட்டுமே முதல்வரை விமான நிலையத்தில் சந்தித்து வரவேற்றிருக்கின்றனர். இது சசிகலா அணியினரின் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்துள்ளது.

அடடா மத்தவங்க என்ன ஆனாங்க
காரணம், அதிமுகவில் மொத்தம் மக்களவை மற்றும் மாநிலங்களை எம்.பிக்களின் எண்ணிக்கை 50. அதில் 12 பேர் தற்போது ஓ.பன்னீர் செல்வம் அணியில் இருக்கின்றனர். முதல்வரை சந்திக்க தம்பிதுரையுடன் சேர்ந்து 19 பேர் மட்டுமே சென்றுள்ளனர். மீதி 19 பேர் யார் கட்டுப்பாட்டில் உள்ளனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தம்பிதுரை பதவி பறிபோகுமா?
அதிமுக எம்.பிக்கள் தற்போது மூன்று அணிகளாக பிரிந்து நிற்பது முதல்வரின் பயணத்தில் கண்கூடாக தெரிந்துவிட்டது. இந்த பிரிவை பாஜக அரசு பயன்படுத்திக்கொள்ள திட்டமிடுவதாகத் தெரிகிறது. வெறும் 19 எம்.பிக்களின் ஆதரவை மட்டும் வைத்திருக்கும் அதிமுக (சசி அணி), மக்களவை துணை சபாநாயகர் என்ற பதவியை தம்பிதுரைக்குக் கொடுத்திருக்கிறது.

அலறும் சசி அணி
இப்போது போதிய பலமில்லாத காரணத்தால், அந்த பதவியை அவரிடமிருந்து பறிப்பது குறித்து பாஜக யோசித்து வருவதாகத் தெரிகிறது. அவ்வாறு நிகழ்ந்த்தால், அது சசி அணிக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பது உறுதி.
-
எடப்பாடி பழனிசாமி ஆட்சியை நான்தான் காப்பாற்றிக் கொடுத்தேன்! எனக்கே சீட் இல்லை! தனபால் குமுறல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications