For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுக அழிந்து விட்டது என கூறுவதா.. பொன்னாருக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கண்டனம்

மதுரையில் பேசிய மத்திய இணை அமைச்சர், அதிமுக அழிந்துவிட்டது என கூறுவது தவறு என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்லார்.

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக அழிந்துவிட்டது என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கூறியதற்கு அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில், செய்தியாளர்களிடத்தில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுகவில் சலசலப்புகளை உருவாக்கி சூழ்ச்சிகளை செய்யும் சிலரைப் பார்த்து, அதிமுக அழிந்துவிட்டது என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் கூறியது தவறு. அனைத்து வகையான எதிர்ப்புகளைக் கண்டு வெற்றி பெற்ற மாபெரும் இயக்கம் அதிமுக என்பதை பொன்.ராதா கிருஷ்ணன் நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.

Admk never vanish said Dindugal Srinivasan

இன்று காலை மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன்,'அதிமுக அழிந்துவிட்டது' என தெரிவித்தார். அவருடைய இந்தக் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, திண்டுக்கல் சீனிவாசன் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், திமுக செயல்தலைவர் ஸ்டாலினை முதல்வராக்கவே ஓ.பன்னீர் செல்வம் இவ்வாறு பிரித்தாளும் சூழ்ச்சியை செய்துகொண்டிருக்கிறார் என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

English summary
Some people doing cunning work in admk for their selfishness. It is not fair for State minister Pon.Radha krishnan to say Admk was vanished. Admk will stand for ever, even after seeing all cunningness, said minister Dindugal Srinivasan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X