அதிமுக அழிந்து விட்டது என கூறுவதா.. பொன்னாருக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கண்டனம்
மதுரையில் பேசிய மத்திய இணை அமைச்சர், அதிமுக அழிந்துவிட்டது என கூறுவது தவறு என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்லார்.
சென்னை: அதிமுக அழிந்துவிட்டது என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கூறியதற்கு அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில், செய்தியாளர்களிடத்தில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுகவில் சலசலப்புகளை உருவாக்கி சூழ்ச்சிகளை செய்யும் சிலரைப் பார்த்து, அதிமுக அழிந்துவிட்டது என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் கூறியது தவறு. அனைத்து வகையான எதிர்ப்புகளைக் கண்டு வெற்றி பெற்ற மாபெரும் இயக்கம் அதிமுக என்பதை பொன்.ராதா கிருஷ்ணன் நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.
இன்று காலை மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன்,'அதிமுக அழிந்துவிட்டது' என தெரிவித்தார். அவருடைய இந்தக் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, திண்டுக்கல் சீனிவாசன் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், திமுக செயல்தலைவர் ஸ்டாலினை முதல்வராக்கவே ஓ.பன்னீர் செல்வம் இவ்வாறு பிரித்தாளும் சூழ்ச்சியை செய்துகொண்டிருக்கிறார் என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.