Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நன்னிலம் அதிமுகவில் கோஷ்டி சண்டை.. ஆபீஸை பூட்டி சீல் வைத்த கோட்டாட்சியர்!

நன்னிலத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தை பயன்படுத்துவதில் இரு தரப்பினரும் சொந்தம் கொண்டாடியதால் அதை பயன்படுத்த தடை விதித்து சீல் வைக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

நன்னிலம்: நன்னிலத்தில் அதிமுக அலுவலகத்தை பயன்படுத்துவதில் இரு தரப்பினரும் சொந்தம் கொண்டியதால் அந்த அலுவலகத்தை யாரும் பயன்படுத்த முடியாதபடி கோட்டாட்சியர் பூட்டு போட்டு சீல் வைத்தார்.

நன்னிலத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தை அமைச்சர் காமராஜின் ஆதரவாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு டிடிவி தினகரன் ஆதரவாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ADMK office in Nannilam should not be used by 2 factions

அமைச்சர் காமராஜின் ஆதரவாளர்கள் அலுவலகத்தை பயன்படுத்துவதற்கு காவல் துறையினரிடம் இன்று தினகரன் தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினர் கட்சி அலுவலகத்துக்கு சொந்தம் கொண்டாடுவதால், கட்சி அலுவலகத்தை யாரும் பயன்படுத்தக் கூடாது என கோட்டாட்சியர் முத்து மீனாட்சி உத்தரவு பிறப்பித்தார்.

கட்சி அலுவலகத்தின் கதவை மூடி, சீல் வைத்த கோட்டாட்சியர் அதில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டினார். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+