அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 3 திருநங்கைகள் விருப்பம்!
சென்னை: அதிமுக சார்பில் உள்ளட்சித் தேர்தலில் போட்டியிட 3 திருநங்கைகள் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து அந்தந்த மாவட்ட செயலர் அலுவலகங்களில் விருப்ப மனுக்கள் கடந்த செப்.16ம் தேதி முதல் பெறப்படும் என்று அதிமுக தலைமை அலுவலகம் அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட திருநங்கைகள் 3 பேர் விரும்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். சென்னை ஆர்.கே.நகர் தொகுதி 40வது வட்டத்தைச் சேர்ந்த 44 வயதான சுதா, மதுரை தெற்கு தொகுதி 74வது வட்டத்தைச் சேர்ந்த 54 வயதான பாரதி கண்ணம்மா, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி 109வது வட்டத்தைச் சேர்ந்த 66 வயதான நூரி ஆகியோர் தங்களது விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
காவிரிப் பிரச்சினைக்காக தமிழகத்தில் பந்த் நடந்த அன்று அதிமுகவில் விருப்ப மனுக்கள் தாக்கல் தொடங்கியது. காவிரி பந்த்தை சற்றுக் கண்டு கொள்ளாமல் அதிமுகவினர் முதல் நாளே விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்ய கட்சி அலுவலகங்களில் குவிந்து விட்டனர் என்பது நினைவிருக்கலாம்.