இப்படியும் ஓட்டு கேட்போம்ல.. ஆர்.கே.நகரில் அசத்தும் அண்ணா தி.மு.க. போஸ்டர்!!
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஜெயலலிதாவுக்கு வாக்கு கேட்கும் அண்ணா திமுக தொண்டர்கள் அடித்து ஒட்டியிருக்கும் சுவரொட்டிகள் ஸ்ஸப்ப்ப்ப்பா..... என அசர வைக்கும் வகையில் இருக்கிறது.
ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதியில் அண்ணா தி.மு.க. வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். பிரதான எதிர்க்கட்சிகளான திமுக, பாமக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்டவை புறக்கணித்துள்ளன.

எப்படியும் ஜெயலலிதா வென்றுவிடுவார் என்பதற்காகவெல்லாம் அதிமுக தொண்டர்கள் அசரவில்லை. அண்ணா திமுக தலைமையை மட்டுமின்றி மக்களையும் அசத்தும் வகையில் விதம்விதமான சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
அதில் ஒன்றில் ஜெயலலிதாவுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிப்பீர் என்பது கண்ணுக்கே தெரியாத சைஸுக்கு இடம்பெற்றுள்ளது.
அத்துடன் 'ஊழலின் ஊற்றே ஜூன் 3- கருவின் குற்றமே' உங்களுக்குக் காத்திருக்கு-ஸ்பெக்ட்ரமே" என பெரிய எழுத்துகளில் பிரிண்ட் செய்து திமுக தலைவர் கருணாநிதியை காய்ச்சி எடுத்துள்ளனர். அத்துடன் ஒட்டுமொத்த கருணாநிதி குடும்பமே சிறைக்கு பின்னால் இருப்பது போலவும் புகைப்படத்தை போட்டு அசத்தியுள்ளனர்.
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா












Click it and Unblock the Notifications