இறுதி வரை நம்பி இருந்தோம்... மத்திய அரசின் செயல் வருத்தம் தருகிறது... கோகுல இந்திரா வேதனை!
உச்சநீதிமன்ற உத்தரவை மத்திய அரசு பின்பற்றவில்லையே என்பது வருத்தமாக இருப்பதாக அதிமுக செய்தித் தொடர்பாளர் கோகுல இந்திரா தெரிவித்துள்ளார்.
சென்னை : உச்சநீதிமன்ற உத்தரவை மத்திய அரசு பின்பற்றவில்லையே என்பது வருத்தமாக இருப்பதாக அதிமுக செய்தித் தொடர்பாளர் கோகுல இந்திரா தெரிவித்துள்ளார். இறுதி வரை நம்பிக்கையோடு இருந்தோம் ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
காவிரி நீரை நியாயப்படி 4 மாநிலங்கள் பிரித்துக் கொள்வதை கண்காணிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் உச்சநீதிமன்றம் அறிவித்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் கடைசி வரை மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவே இல்லை.

இந்நிலையில் மத்திய அரசின் செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக செய்தித் தொடர்பாளர் கோகுல இந்திரா, நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு பின்பற்றவில்லையே என்பது வருத்தமாக இருக்கிறது என்றார்.
நாடாளுமன்றத்தில் 3வது பெரிய கட்சியாக இருக்கும் அதிமுகவை மத்திய அரசு பொருட்படுத்தவில்லலை. தமிழக விவசாயிகளின் வாழ்வாதார, ஜீவாதார பிரச்னையான இந்த விஷயத்தில் மத்திய அரசு செவிசாய்க்கவே இல்லை.
இறுதி நேரம் வரை மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்ற நம்பிக்கை இருந்தது.
முதல்வர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று யாராலும் சொல்ல முடியாது. அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானம் போட்டு அந்த தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பினார். பிரதமரை சந்திக்க நேரம் கோரினார், கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதினார்.
நாடாளுமன்றத்திலும் எம்பிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர். ராஜினாமா செய்துவிட்டால் ஏதாவது செய்யப்படுமா என்றும் கோகுல இந்திரா கேள்வி எழுப்பியுள்ளார்.
-
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்த எடப்பாடி! ஆனா 5 பவுன் நகை கடன் ரத்து இல்லையே! -
குறிவைத்து அடித்த எடப்பாடி பழனிசாமி.. வீழ்த்தப்பட்ட ஜெயக்குமார்.. அதிமுக 2021 தேர்தல் பிளாஷ்பேக் -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே












Click it and Unblock the Notifications