Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எம்ஜிஆருக்கு சின்னம்மா இருந்ததை பண்ருட்டியார் இப்பதான் சொல்றாரு- பேச்சாளர் ஜெயவேல் பொளேர்

அதிமுக பேச்சாளர் சிதம்பரம் ஜெயவேல் கட்சியில் இருந்து வெளியேறிவிட்டார். சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் விலகியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக முதன்மை பேச்சாளர்களில் ஒருவரான சிதம்பரம் ஜெயவேல் அக்கட்சியில் இருந்து வெளியேறியுள்ளார். அத்துடன் எம்ஜிஆருக்கு ஒரு சின்னம்மா இருக்கிறார் என்பதை தற்போதுதான் பண்ருட்டியார் சொல்லித்தான் தமக்கு தெரியும் எனவும் அவர் கிண்டலடித்துள்ளார்.

இது தொடர்பாக சிதம்பரம் கோ. ஜெயவேல் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜெயலலிதாவால் 5 ஆண்டுகள் கட்சியைவிட்டு நீக்கி பின் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து கட்சியில் இணைந்த சசிகலாவை பதவியில் இருப்போர், தங்கள் சொத்துக்களை பாதுகாத்துக் கொள்ள ஆதரிக்கலாம். கழகத்தின் அடிமட்ட தொண்டன் சசிகலாவை தலைவியாக ஏற்றுக்கொள்ள மாட்டான்.

ADMK star speaker Jeyavel quits from party

எம்ஜிஆர் இரட்டைஇலை சின்னத்தை மட்டும் விட்டுவிட்டு செல்லவில்லை, சின்னம்மாவையும் விட்டுச்சென்றார் என்றார் பண்ருட்டியார். எம்ஜிஆருக்கு ஒரு சின்னம்மா இருப்பதை பண்ருட்டி ராமச்சந்திரன் கூறித்தான் தெரிந்து கொண்டோம்.

ஜெயலலிதாவின் இரு கால்களையும் வெட்டி எடுத்துவிட்டு புரட்சிதலைவி நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார்; தொண்டையில் துளை போட்டு விட்டு வீட்டில் இருந்து கொண்டு வந்த கிச்சடி சாப்பிட்டார் என அறிக்கைகள் வெளியிட்டனர். எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட கட்சி சசிகலா போன்றோர் கையில் சென்றது குரங்கு கையில் பூமாலை சிக்கியதாகிவிடும்.

ஆகையால் கட்சியின் பேச்சாளர் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயவேல் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+