அதிமுக இணைப்பு ஏமாற்றமளிக்கிறது.. ஓ.பி.எஸ். அணியிலிருந்து ஒரு அதிருப்திக் குரல்!
அதிமுக அணிகள் இணைப்பு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என ஓபிஎஸ் அணியின் செம்மலை எம்எல்ஏ கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

சென்னை: அதிமுக அணிகள் இணைப்புக்குப் பிறகு அது குறித்து ஊடகங்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செம்மலை, தமக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பைக் கூட்டியுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு இரண்டு மூன்றாக உடைந்த அதிமுக நேற்று மிகுந்த பரபரப்புக்கு இடையே ஒரே அணியாக இணைந்தது. சென்னையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த இணைப்பு விழாவுக்குப்பிறகு ஓபிஎஸ் அணியினருக்கு துணை முதல்வர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர் பதவிகள் கிடைத்தன.

ஆனால், ஓபிஎஸ் அணி உருவானது முதல் கடந்த 6 மாதங்களாக சசிகலா மற்றும் தினகரன் எதிர்ப்பு நிலைப்பாட்டிலேயே இருப்பவர் முன்னாள் அமைச்சர் செம்மலை. இவருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
ஆனால், செம்மலை எம்எல்ஏ அமைச்சராகவில்லை. இதனால் அவரின் சொந்த தொகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சி நிலவுகிறது. இந்த நிலையில், இது குறித்து கருது தெரிவித்த செம்மலை, 'அமைச்சர் பதவி அளிக்காதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது ' என்று கூறியுள்ளார்.
கடந்த 2001-06ம் ஆண்டு அதிமுக ஆட்சியில், ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரத்துறை மற்றும் கல்வி அமைச்சராக செம்மலை இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓபிஎஸ் அணியின் முக்கிய அமைச்சரும், முதல்வர் எடப்பாடியின் சொந்த மாவட்டமான சேலத்தைச் சேர்ந்தவருமான செம்மலை அதிருப்தி தெரிவித்து பகிரங்கமாக குரல் எழுப்பியிருப்பது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பிரச்சாரத்தில் சட்டென கண்ணீர் மல்கிய அதிமுக வேட்பாளர்.. நெகிழ்ந்த கோவை கிராமம் -
தங்கத்திற்கு தடை.. ரஷ்ய உத்தரவால் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயரபோகுது.. புடின் மெகா திட்டம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி?












Click it and Unblock the Notifications