மாலையில் சென்னை வந்து இரவில் டெல்லி திரும்பிய அத்வானி, ராஜ்நாத்..!
சென்னை: பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் நேற்று மாலை சென்னை வந்தனர். பிரபல ஆடிட்டரும், பாஜக அனுதாபியுமான ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் இருவரும் இரவிலேயே டெல்லி திரும்பி விட்டனர்.

சென்னையில் ஆடிட்டர் குருமூர்த்தி இல்ல திருமண விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மத்திய உள்துறை அமை்ச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர் நேற்று மாலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தனர்.
திருமண விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், நேற்று இரவே அத்வானியும், ராஜ்நாத்சிங்கும் விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். முன்னதாக இவர்களை பாஜக தலைவர்களான மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், இல.கணேசன், எச்.ராஜா உள்ளிட்டோர் வரவேற்றனர்.












Click it and Unblock the Notifications