'அடங்கா அக்கப்போர்': தனிக்கட்சி தொடங்குவதாக வதந்தி பரப்புகின்றனர்- கார்த்தி சிதம்பரம்
சென்னை: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக் கட்சி தொடங்க இருப்பதாக சிலர் வதந்திகளை பரப்புகின்றனர் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காங்கிரசை விட்டு ஜி.கே.வாசன் வெளியேறி தனிக் கட்சி தொடங்கியதும் காங்கிரசில் ப. சிதம்பரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது. இதனால் ப.சிதம்பரம் அதிருப்தியடைந்தார்.

இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளர் பதவியையாவது பெறலாம் என்று எதிர்பார்த்த கார்த்தி சிதம்பரத்துக்கு அந்தப் பதவியும் வழங்கப்படவில்லை.
இது ப.சிதம்பரம் ஆதரவாளர்களை மேலும் விரக்தியடையச் செய்தது. இதன் வெளிப்பாடாகத்தான் சிதம்பரம் ஆதரவாளராக இருந்து வந்த செல்வப்பெருந்தகை இப்போது, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுடன் நெருக்கமாகியுள்ளார்.
மேலும் கார்த்தி சிதம்பரம் கடந்த 22-ம் தேதி தனது ஆதரவாளர்களுடன் தனியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தியதற்கு நோட்டீஸ் அளித்ததோடு மட்டுமில்லாமல் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளிப்படையாக விமர்சித்தது ப. சிதம்பரத்தை அதிருப்தியின் உச்சிக்கே கொண்டு சென்றது.
இந்தப் பின்னணியில்தான் வாசனை ப.சிதம்பரம் சந்தித்தார் என்றும், தமிழ் மாநில காங்கிரஸில் இணையப் போகிறார் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் ப.சிதம்பரத்தை முதல்வர் வேட்பாளராக்கினால் காங்கிரஸ் கட்சிக்காரனே ஓட்டுப் போடமாட்டான் என்று இளங்கோவன் பேசியதால் ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் கொந்தளித்துப் போயுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ப.சிதம்பரம் தனிக்கட்சி தொடங்கப் போகிறார் என்றும் தகவல்கள் கிளம்பியுள்ளன. ஆனால் இதனை மறுத்துள்ள கார்த்தி சிதம்பரம், தனிக்கட்சி தொடங்குகிறோம் என்று வேண்டுமென்றே சிலர் வதந்தி கிளப்பி வருகிறார்கள். இது முழுக்க முழுக்க உண்மைக்கு புறம்பான தகவல்.
இதனை மறுப்பதோடு வன்மையாக கண்டிக்கிறேன். எங்கள் கட்சி காங்கிரஸ்தான். அதைவிட்டு விலக வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்றார்.
-
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications