மே 4 முதல் ‘அக்னி’ ஆட்டம் ஆரம்பம்…. 110 டிகிரி வரை சுடுமாம்!
சென்னை: தமிழகத்தில் கத்திரி வெயில் காலம் எனப்படும் அக்னி நட்சத்திரம் மே மாதம் 4ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மே 29ஆம் தேதி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாளில் வெப்பநிலை 110 டிகிரிவரை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் சுட்டெரிக்கும் வெயிலை எண்ணி இப்போது மக்களுக்கு வியர்க்கத் தொடங்கியுள்ளது.
ஜோதிடத்தின்படி சூரியன் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு நகர்ந்து செல்லும் காலம்தான் அக்னி நட்சத்திரம் அல்லது கத்தரி வெயில் என்று கூறப்படுகிறது.

அக்னி நட்சத்திர காலம்
அக்னி நட்சத்திர காலத்தில் பொதுவாக உஷ்ணம் அதிகமாக இருக்கும் என்பதால் உடல் உபாதைகள் ஏற்படலாம், சுப காரியங்கள் மேற்கொள்ளக் கூடாது என்று கூறப்படுகிறது.

26 நாட்கள்
பொதுவாக மே மாத முதல் வாரத்தில் தொடங்கிவிடும் அக்னி நட்சத்திரம் இந்த ஆண்டு 4ஆம் தேதி தொடங்கி 26 நாட்கள் நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

110 டிகிரியை எட்டும்
இந்த நேரத்தில் வெயில் 110 டிகிரி அல்லது அதற்கு மேலும் கூட பதிவாகலாம். ஆனால், தமிழகத்தில் இப்போதே அக்னி நட்சத்திரக் காலத்தை போன்ற வெயில் காணப்படுகிறது.

வறண்ட வானிலை
பெரும்பாலான பகுதிகளில் சதமடித்து வரும் வெயில் அதோடு மழை வேறும் பெய்யாமல் வறண்ட வானிலையே காணப்பட்டது. எனினும் அடுத்த இரண்டு நாட்களில் ஆங்காங்கே லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.












Click it and Unblock the Notifications