இலங்கைக்கு போகும்போது இதப்பற்றியெல்லாம் பேசுங்க..: மோடிக்கு கருணாநிதி வலியுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கை செல்லும் பிரதமர் நரேந்திர மோடி தமிழக மீனவர் பிரச்சினை மற்றும் இலங்கை தமிழர்களின் உரிமை பற்றி பேச வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்ல உள்ள நிலையில், அறிக்கை ஒன்றை கருணாநிதி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: இலங்கை தமிழர் நல்வாழ்வு உரிமைகளை நரேந்திர மோடி பெற்றுத்தர வேண்டும். தமிழக மீனவர்களின் மீன்பிடி தொழில் தொடர்பான அதிகாரங்கள் அனைத்தையும் பெற்றுத்தருகின்ற வகையில் நமது பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் பேச வேண்டும்.

Ahead of Narendra Modi's visit to Sri Lanka, some tips from Karunanidhi

தமிழர்களின் நிலங்களை சிங்களரிடம் இருந்து பெறுவதற்கும் மோடி பேச வேண்டும். தமிழக மீனவர்கள் கொள்ளையடிக்க வருபவர்கள் போல் ஒப்பிட்டு தொலைக்காட்சியில் சில நாட்களுக்கு முன்னர் பேட்டியளித்த இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியது கண்டனத்திற்கு உரியது.

மீனவர்கள் மீன்பிடிக்க வருவதை இலங்கை பிரதமர் அவரது வீட்டில் கொள்ளையடிக்க முயலுவதாக ஒப்பிடுவது எப்படி சரியாகும். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதும், கைது செய்வதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+