மக்களை மதிக்காமல் அவசர ஜல்லிக்கட்டு நடத்த முயன்று கேவலப்பட்டு அவமானப்பட்ட அதிமுகவினர்

Subscribe to Oneindia Tamil

மதுரை: அவசர கதியில் ஜல்லிக்கட்டு, ரேக்ளா போன்ற பந்தயங்களை நடத்தி முடித்து நல்ல பெயர் பெற முற்பட்ட அதிமுகவினருக்கு கடைசியில் மக்களிடமிருந்து கிடைத்தது அவமானம் மட்டுமே.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தன மத்திய மாநில அரசுகள். ஆனால் மக்கள் போராட்டம் வெடித்த பிறகு அவசர சட்டத்தை இயற்றி மத்திய அரசிடம் ஒரே நாளில் ஒப்புதலும் பெற்றது தமிழக அரசு. இப்படி ஒரு வழி இருப்பது தெரிந்திருந்தும் இத்தனை நாட்களாக தமிழக அரசு ஏன் சும்மா இருந்தது என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழ ஆரம்பித்தது.

AIADMk leaders who try to gets credit for Jallikattu shocked

இது கோபமாக வெடித்து கிளம்பியது. எங்கள் போராட்டத்தால், அவசர சட்டத்தை உருவாக்கிய நீங்கள், நிரந்தர சட்டம் கொண்டுவாருங்கள். அப்போதுதான் போராட்டத்தைவிட்டு விலகுவோம் என்று கோரசாக அனைத்து நகர போராட்டக்காரர்களும் கூறிவிட்டனர்.

ஆனால் தேதி குறித்தபடி இன்றே ஜல்லிக்கட்டை நடத்தி நற்பெயரை பெறவேண்டும் என்று முனைந்தது அதிமுக. முதல்வர் ஓ.பி.எஸ் பேட்டி ஒருபக்கம், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அறிக்கை மறுபக்கம் என கிரெடிட் வாங்க போட்டா போட்டிகள் நடந்தன .
ஆனால் மக்களோ, நிரந்தர சட்டம் கேட்டு முதல்வரையே பங்கேற்காமல் விரட்டிவிட்டனர்.

அதேநேரம், அதிமுக செய்தி சேனல், டிவிட்டர் ஹேண்டில் போன்றவற்றில் ஜல்லிக்கட்டுக்கு மக்கள் ஆதரவு அளிப்பதாக தொடர்ச்சியாக செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்ரன. ரேக்ளாவுக்கு ஆதரவு அளிப்பதாக செய்தி பரப்பப்படுகிறது. இது மக்களை மேலும் கோபப்படுத்தியுள்ளது. கோவையில் ரேக்ளா போட்டி நடத்தவிடாமல் இளைஞர்கள் தடுத்துவிட்டனர். தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்தவிடாமலும் மக்கள் தடுத்துவிட்டனர். கடைசியில் அதிமுகவினருக்கு அவமானமே மிஞ்சியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+