சட்டசபை தேர்தல் வெற்றி.. சென்னையில் இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்
சென்னை: தமிழக முதல்வராக மீண்டும் பொறுப்பேற்கவுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் இன்று மாலை கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் முதன் முறையாக 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக போட்டியிட்டது. திமுக, காங்கிரஸ் கட்சி மற்றும் சில உதிரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் 6 முனை போட்டி நிலவிய போதிலும், அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. 1984 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒரு கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.

இந்நிலையில், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ள முதல்வர் ஜெயலலிதா இன்று அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் மற்றும் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவிக்கிறார்.
பிற்பகல் 2 மணியளவில், அண்ணாசாலை, அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள பெரியார் சிலைக்கும், அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கும், ஸ்பென்சர் அருகேயுள்ள எம்ஜிஆர் சிலைக்கும் மாலை அணிவிக்கிறார்.
இதையடுத்து சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாலை 5 மணிக்கு, தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுக் கடிதத்தை, ஆளுநர் கே.ரோசய்யாவைச் சந்தித்து ஜெயலலிதா அளிப்பார் எனத் தெரிகிறது. இதில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து ஜெயலலிதா மீண்டும் எப்போது முதல்வராக பதவியேற்பார் என்ற தேதி தெரிய வரும்.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications