For Daily Alerts
Just In
அதிமுக எம்.எல்.ஏக்கள் நாளை சென்னை எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் உண்ணாவிரதம்
சென்னை: ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் நாளை சென்னை எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து அதிமுகவினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் நாடாளுமன்ற வளாகம் முன்பாக அதிமுக எம்.பிக்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் அனைத்து அதிமுக எம்.எல்.ஏ.க்களும் சென்னையில் நாளை ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
சென்னையில் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் நாளை அனைத்து எம்.எல்.ஏக்களும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
Comments
jayalalitha jail admk mlas fast mgr memorial அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரதம் எம்ஜிஆர் நினைவிடம் ஜெயலலிதா சிறை
English summary
AIADMK MLAs to stage fast in front of Chennai MGR memorial tomorrow from 8 am to 5 pm.
Story first published: Friday, October 3, 2014, 15:57 [IST]