தமிழக அரசியலில் கேப்டனுக்கு டிமாண்ட் அதிகரிப்பதால் ஷாக் கொடுக்க எதிர் முகாம் ஜோர் திட்டம்
சென்னை: தேமுதிகவுக்கு இப்போது டிமாண்ட் அதிகரித்துள்ளது. திமுக, பாஜக, மக்கள் நல கூட்டணி என கேப்டன் வருகைக்காக ஆளும் கட்சியை தவிர அனைத்து தரப்புமே வழி மீது விழி வைத்து காத்துள்ளன.
2015 சட்டசபை தேர்தல், தே.மு.தி.க.வுக்கு மிகவும் முக்கியமானது. சரியான இடத்தில் கூட்டணி வைத்து வெற்றி பெற்றால்தான் கட்சியை காப்பாற்ற முடியும் என்ற நிலை உள்ளது.
அதேநேரம், இந்த தேர்தலில் விஜயகாந்த்துக்கு டிமாண்டும் அதிகம் உள்ளது. கணிசமான வாக்கு வங்கியை குறிவைத்து அவரை இழுத்துவிட திமுக, பாஜக, மக்கள் நல கூட்டணி தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

ஆனால், அடிப்படையையே ஆட்டம் காணச் செய்ய அதிமுக, ஆதரவு தேமுதிக எம்.எல்.ஏக்கள் முயன்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்நிலையில், வெள்ள நிவாரண உதவி செய்ததால், தேமுதிக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு நிறைய செலவு ஏற்பட்டுள்ளது. நிர்வாகிகள் தங்கள் கையில் இருந்து பணம் போட்டுள்ளனர்.
இதைபயன்படுத்தி, பண கஷ்டத்தில் உள்ளவர்களை மடக்கி அ.தி.மு.க. பக்கம் இழுத்து செல்லும் பணியில், அ.தி.மு.க ஆதரவு, தே.மு.தி.க. எம்.எல்.ஏ.,க்கள், தீவிரமாக உள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் இருவர், மாநில நிர்வாகி ஒருவர் வெள்ள நிவாரண பொருட்களை, அபேஸ் செய்ததற்காக விஜயகாந்திடம் நன்கு டோஸ் வாங்கியுள்ளனர். அவர்களையும், அதிமுக ஆதரவு தேமுதிக எம்.எல்.ஏக்கள் ஈர்க்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
எனவே விரைவில், தேமுதிக அடித்தளத்தை ஆட்டம் காணச் செய்யும் பெரும் ஆபரேசன் காத்திருக்கலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications