பாஜகவுடன் கூட்டணி வைக்க அதிமுக விரும்புவது ஏன்? திருநாவுக்கரசர் விளக்கம்
சென்னை: பாஜகவுக்கு பயந்தே அக்கட்சியுடன் அதிமுக கூட்டணி வைக்க நினைக்கிறது என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
ஆர்.எம். வீரப்பனின் வீட்டுக்கு சென்று அவருக்கு 92வது பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த பின்னர் திருநாவுக்கரசர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அதிமுகவின் எந்த பிரிவு பாஜகவோடு கூட்டணி வைத்தாலும் அது அவர்களுக்கு அரசியல் ரீதியாக வீழ்ச்சியை கொடுக்கும். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உயிரோடு இருந்தால் பாஜகவோடு அதிமுக கூட்டணி வைக்க மாட்டார்கள். ஆனால், அவர்களல் பெயரை சொல்லிக்கொண்டு ஆட்சி செய்பவர்கள் பாஜகவோடு கூட்டணி வைக்க
நினைக்கிறார்கள். இது அத் தலைவர்களின் கொள்கைகளுக்கு எதிரானது.
பாஜகவோடு அதிமுக கூட்டணி வைத்தால் அது பாசத்தால் வந்ததாக இருக்காது. பயத்தால் வந்ததாக இருக்கும். அதிமுகவின் எந்த பிரிவு பாஜகவோடு கூட்டணி அமைத்தாலும் அது அந்த பிரிவுக்கு அரசியல் ரீதியாக நஷ்டத்தை கொடுக்கும். எல்இடி பல்பு கொள்முதலில் பல கோடி ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற வேண்டும். இவ்வாறு திருநாவுக்கரசர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications