முடங்கிய ஏர்செல் சேவை.. வாடிக்கையாளர்கள் கொந்தளிப்பு.. கோவை அலுவலகம் முற்றுகை
கோவை: ஏர்செல் சேவை முடங்கியுள்ளதால் வாடிக்கையாளர்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.
ஏர்செல் நிறுவனம் விரைவில் மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த டெலிபோன் சேவை நிறுவனத்திற்கு தமிழகத்தில்தான் வாடிக்கையாளர்கள் அதிகம். சுமார் ஒன்றரை கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
தமிழகத்தின் கிராமங்களில் முதல் முதலாக கோபுரம் அமைத்து செல்போன் இணைப்புகள் தந்தது இந்த நிறுவனம்தான் என்பதால் தமிழக செல்போன் புரட்சியில் இதற்கு முக்கிய பங்கு உள்ளது.

இந்த நிலையில் கடந்த பல நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஏர்செல் சேவை முடங்கியுள்ளது. பொதுவாக, சர்வீஸ் வழங்கும் தொலைபேசி நிறுவனத்தை மாற்றிக்கொள்ள, செல்போன் நிறுவனத்துக்கு குறுந்தகவல் அனுப்பினால் அவர்கள் கோட் எண் வழங்குவார்கள். அந்த கோட் எண்ணை வாடிக்கையாளர் மாற விரும்பும் நிறுவனத்தில் அளித்தால், புதிய நிறுவனத்தில் அதே பழைய எண் கிடைக்கும்.
ஆனால், அப்படி எஸ்எம்எஸ் அனுப்ப ஏர்செல் சிக்னல் கிடைக்க வேண்டும், இப்போது அதுவும் கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். கோவையை தலைமையிடமாக கொண்டது ஏர்செல் நிறுவனம் என்பதால், அங்குள்ள அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் குவிந்தனர்.
அதிகாரிகளுடன் வாடிக்கையாளர்கள், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். செலுத்திய பணத்தை திரும்ப தருமாறு ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் கோஷமிட்டு வருகிறார்கள்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதேபோன்று ஏர்செல் வாடிக்கையாளர்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications